உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
47. உரிமை விலாவணை
 
         
           அடுத்த காத லணங்கைத் தந்தவன்
     95    விடுக்கப் போந்தனென் மீண்டிது கூறெனத்
           தடக்கை கூப்பிநின் னடித்திசைக் கிறைஞ்ச
           ஒழிந்தியான் வந்தனெ னிகழ்ந்ததை நினைப்பினோர்
           மாயம் போலுங் காவல வருளென
 
             (இதுவுமது)
         94 - 98: அடுத்த..........அருளென
 
(பொழிப்புரை) அவ்வுதயணன் என்னைத் திரும்பி நோக்கி, "வராக, என்பால் தொடர்ந்த காதலையுடைய இவ்வாசவதத்தையை அம்மன்னவன் என்பாற் கொடுத்து விடைகொடுத் தலாலேயே நான் அவளோடு செல்கின்றேன் காண் ஆதலால் நீ மீண்டுபோய் இவ்வணக்கத்தைக் கூறுக ! என்று கூறித் தனது பெரிய கைகளைக் கூப்பிப் பெருமான் திருவடியிருந்த இத்திசை நோக்கி வணங்கக் கண்டு யான் பின் சேறலொழிந்து வந்தேன். நிகழ்ந்த இந்நிகழ்ச்சிகளை யெல்லாம் நினைந்து பார்க்கும் பொழுது ஒரு இந்திரசாலம் போலத் தோன்றும்; பெருமானே ! அருள் செய்க !" என்று கூறாநிற்ப என்க.
 
(விளக்கம்) அவன் - பிரச்சோதனன்: காதலணங்கு - வாசவதத்தை. அவன் தந்து விடுக்கப் போந்தனென் என மாறுக. மாயம் - மாயச் செயல்