(விளக்கம்) தன்குடியை விளக்குதலானே விளக்கம் என்றான். "குடி யென்னும்
குன்றாவிளக்கம்" என்றார் வள்ளுவனாரும் (601). பெயர் -- புகழ்.
மகிழ்ச்சி என்றது உவகை மகிழ்ச்சியிலுற்ற சோர்வினை,
"இறந்த வெகுளியிற் றீதே
சிறந்த உவகை மகிழ்ச்சியிற் சோர்வு"
(குறள் - 531)
என்னும் வள்ளுவர் பொன்மொழியுங்
காண்க.
|