(விளக்கம்) "யவனரியற்றிய வினைமாண் பாவை கையேந்தைய னிறையநெய்
சொரிந்து பரூஉத்திரி கொளீஇய குரூஉத்தலை நிமிரெரி" என்பது (101 - 3)
நெடுநல் வாடை. கொண்ட அகலில் நெய் சொரியும் விளக்கு
என்க.
சாலேகம் - சாளரம் - ஒற்றி - ஒன்றச்சார்த்தி.
இழிகை - கைச்சுரிகை. அமளி - கட்டில். எலிமயிராலியற்றிய
போர்வை என்க. எலிமயிர்க்கம்பல முண்மையை, "மயிரெலியின்
போர்வையொடெம் மன்னன் விடுத்தானே" எனவும், (1874) "எலிமயிர்ப்
போர்வை வைத்து" எனவும், (2471) "எலிமயிர்த்தொழிற் பொங்கு பூம்புகைப்
போர்வை மேயினார்" எனவும், (2680) ''செந்நெ ருப்புணுஞ் செவ்வெ
லிம்மயிரந்நெ ருப்பள வாயபொற் கம்பலம்'' எனவும் (2686) வரும் சீவக
சிந்தாமணியானும் உணர்க. கலம் - மரக்கலம். கால் - வண்டி. படை -
படுக்கை. அழற்றல் - வெப்பந் தருதல். பள்ளியுள் - (213) தோன்றி என
இயையும்.
|