(விளக்கம்) வரை - மூங்கில். மரையா - ஒரு விலங்கு. முசுண்டை
- முசுட்டைக்கொடி. இரலை - கலைமான். புறவு - முல்லை நிலம்.
அமரா - அமர்ந்து. தொழுதி - கூட்டம். புல்லுதளினம் - ஆட்டினம். புகன்று
-விரும்பி. படி - அளவு கருவி. கடி - காவல். பண்டம் - முல்லை நிலத்து
விளையும் பொருள்கள். நாற்றம் நந்திப் புல்லுப கிடந்த என இயைக்க.
நந்தி - மிகுந்து. பயம் - பால். மன்பெருஞ் சிறப்பின் சிறு பிடி என
இயைக்க. அது கடந்த தொலைவினைக் கருதி இரங்குவார் சிறுபிடி என்றார்.
விரைந்து சென்றது என்க.
49. முல்லைநிலங் கடந்தது
முற்றிற்று.
|