| உரை | 
|  | 
| 1. உஞ்சைக்காண்டம் | 
|  | 
| 50. குறிஞ்சிநிலங் கடந்தது | 
|  | 
| வல்லவை 
      யெல்லாம் வில்லோன் 
      மக்களை விரைந்தன 
      னாகிய விறல்கெழு 
      வீரியன்
 முகைந்த 
      புறவின் முல்லையம் 
      பெருந்திணை
 இகந்த 
      பின்றை யிருபாற் பக்கமும்
 | 
|  | 
| 1 - 3 
      : விரைந்தனன்..........பக்கமும் | 
|  | 
| (பொழிப்புரை)  இவ்வாறு 
      பிடியானையைச் செலுத்தி விரைந்து   சென்றவனாகிய வெற்றிபொருந்திய வீரன் 
      உதயணமன்னன் யாண்டும்   மரஞ்செடி கொடிகள் அரும்பிய கொல்லைகளையுடைய 
      அம்முல்லை   நிலத்தைக் கடந்த பின்னர் இரு பக்கங்களினும் 
      என்க. | 
|  | 
| (விளக்கம்)  விறல் - வெற்றி. இகந்த 
      பின்றை - கடந்த   பின்னர். பாற்பக்கம்: இருபெயரொட்டு. |