| (விளக்கம்)  ஆன்றோர்போல 
      நிலைபெற்றனவும், மகளிர்   மனம்போன்று நிரம்பாநெறியுடையனவும், ஆகிய வரை 
      எனவும்,   அருவியறாதனவாகலின் வித்திய புனந்தோறும் குறவர் பொத்திய 
      எரியாகிய   விளக்கில் ஏறுதுயில் கொள்ளும் குளிர்ந்த வரை யெனவும், 
      தனித்தனி கூட்டுக.        துளக்கம் - நடுக்கம். சதுரச் சந்தி - 
      நாற்சந்தி. சமழ்ப்பு - நாணம்.   கலாபம் - கூட்டம். ஒட்டிமை - ஒற்றுமை. 
      பட்டிமை - வஞ்சனை. மகளிர்:   பரத்தையர். கல்லாமாந்தர் உள்ளம் 
      நொய்யனவே சுமந்திருத்தல் போன்று   பயன்படாத நொய்ய நுரையைச் 
      சுமந்தென்க. அருவி அருமை வித்தற்குங்   கண்படை கோடற்கும் தகரம் 
      கவினுதற்கும் ஏதுவென்க. பருவி - பருத்தி,   புனம் - தினைப்புனம். ஈரம் - 
      அன்பு. ஆரத்துணி - சந்தனக்கட்டை.   தகரம் - ஒரு மரம். |