(விளக்கம்) ஆன்றோர்போல
நிலைபெற்றனவும், மகளிர் மனம்போன்று நிரம்பாநெறியுடையனவும், ஆகிய வரை
எனவும், அருவியறாதனவாகலின் வித்திய புனந்தோறும் குறவர் பொத்திய
எரியாகிய விளக்கில் ஏறுதுயில் கொள்ளும் குளிர்ந்த வரை யெனவும்,
தனித்தனி கூட்டுக. துளக்கம் - நடுக்கம். சதுரச் சந்தி -
நாற்சந்தி. சமழ்ப்பு - நாணம். கலாபம் - கூட்டம். ஒட்டிமை - ஒற்றுமை.
பட்டிமை - வஞ்சனை. மகளிர்: பரத்தையர். கல்லாமாந்தர் உள்ளம்
நொய்யனவே சுமந்திருத்தல் போன்று பயன்படாத நொய்ய நுரையைச்
சுமந்தென்க. அருவி அருமை வித்தற்குங் கண்படை கோடற்கும் தகரம்
கவினுதற்கும் ஏதுவென்க. பருவி - பருத்தி, புனம் - தினைப்புனம். ஈரம் -
அன்பு. ஆரத்துணி - சந்தனக்கட்டை. தகரம் - ஒரு மரம்.
|