| (விளக்கம்)   மறுகை - வீதி. நிரப்பம் - 
      நிரம்புதல். முரப்பு   நிலை முனாது - பருக்கைக் கற்களையுடைய மேட்டு 
      நிலத்தில் நிற்றலை   வெறாமல். கல் - கன்னிலம். செல்லம் - துன்பம். தூ 
      - வலிமை. பிலம் - குகை.  அரில். சிறுதூற்றின் பிணக்கம். இறும்பு - குறுங்காடு. 
      கொளீஇய - கொள்ளற்   பொருட்டு. இதற்குக் குறவர் என எழுவாய் 
      வருவித்தோதுக. 50 ஆம் வரியில் இரண்டு சீர்ச் சொற்கள் 
      அழிந்தன. விளக்கமும் என்க. ஏனம் - பன்றி. கானல் - ஈண்டுச்   சோலை 
      என்னுமளவிற்றாய் நின்றது. தீயின் கண்ணுற மாட்டி என்க. வெருள் -   வெருட்சி 
      வருள்படப் போக்கிய இருள்பட வோங்கிய வெண்டீ விளக்கம் என   இயைக்க. 
      இருள்பட வோங்கிய வேலி எனலுமாம். எதிரெதிர் கலாஅய்   என்றமையால் பல 
      கதிரோன் போல என இல்பொருள் உவமையாகக் கொள்க. இ  யற்று - 
      ஒப்பனை.                 50. 
      குறிஞ்சிநிலங் கடந்தது முற்றிற்று.
 
 |