(விளக்கம்) மறுகை - வீதி. நிரப்பம் -
நிரம்புதல். முரப்பு நிலை முனாது - பருக்கைக் கற்களையுடைய மேட்டு
நிலத்தில் நிற்றலை வெறாமல். கல் - கன்னிலம். செல்லம் - துன்பம். தூ
- வலிமை. பிலம் - குகை. அரில். சிறுதூற்றின் பிணக்கம். இறும்பு - குறுங்காடு.
கொளீஇய - கொள்ளற் பொருட்டு. இதற்குக் குறவர் என எழுவாய்
வருவித்தோதுக. 50 ஆம் வரியில் இரண்டு சீர்ச் சொற்கள்
அழிந்தன. விளக்கமும் என்க. ஏனம் - பன்றி. கானல் - ஈண்டுச் சோலை
என்னுமளவிற்றாய் நின்றது. தீயின் கண்ணுற மாட்டி என்க. வெருள் - வெருட்சி
வருள்படப் போக்கிய இருள்பட வோங்கிய வெண்டீ விளக்கம் என இயைக்க.
இருள்பட வோங்கிய வேலி எனலுமாம். எதிரெதிர் கலாஅய் என்றமையால் பல
கதிரோன் போல என இல்பொருள் உவமையாகக் கொள்க. இ யற்று -
ஒப்பனை.
50.
குறிஞ்சிநிலங் கடந்தது முற்றிற்று.
|