| உரை | 
|  | 
| 1. உஞ்சைக்காண்டம் | 
|  | 
| 51 நருமதை கடந்தது | 
|  | 
| எய்தி யிகந்த வியற்றமை 
      யிரும்பிடி கொய்பூங் 
      குறிஞ்சிக் கொழுநிலங் 
      கைவிட்
 டைந்நான் 
      கெல்லையொ டாறைந் தகன்றபின்
 | 
|  | 
| 1 - 3: 
      எய்தி..........அகன்றபின் | 
|  | 
| (பொழிப்புரை)  இவ்வாறு 
      குறிஞ்சி நிலத்தில் விரைந்து சென்று   கடந்த ஒப்பனையமைந்த அப்பெரிய 
      பிடியானை கொய்தற்கியன்ற   மலரையுடைய கொழுவிய அக்குறிஞ்சி நிலத்தைவிட்டு 
      இருபத்தைந்து   காவத வழியைக் கடந்த பின்னர் என்க. | 
|  | 
| (விளக்கம்)  கொழுநிலம் - செழித்த நிலம். ஐந்நான்கு 
      எல்லை  யோடு ஐந்து ஆறு என மாறுக. ஆறு - வழி. இருபத்தைந்து   காவத 
      வழி என்றவாறு. |