உரை |
|
1. உஞ்சைக்காண்டம் |
|
51 நருமதை கடந்தது |
|
35 பன்மலைப்
பிறந்த தண்ணிற
வருவிய அமலை
யருங்கல மடக்குபு
தழீஇத் தன்னிற்
கூட்டிய தானைச்
செல்வமொ டிருகரை
மருங்கினும் பெருகுபு தழீஇ
|
|
(இதுவுமது)
35 - 38: பன்மலை............தழீஇ
|
|
(பொழிப்புரை) மேலும் பல்வேறு
மலைகளினும் தோன்றிய ஆரவாரமும் குளிர்ந்த நிறமும் உடைய அருவிகள்
கொணர்ந்த அணிகலன்களையும் தன்னுள்ளடக்கிக் கொண்டு தன்பால் வந்து
கலக்கும் ஏனைச் சிற்றாறுகளாகிய துணைப்படையோடுஞ் செல்வத்
தோடும் தனது இரண்டு கரையிடையே பெருகி அவற்றைத் தழுவிக்
கொண்டென்க.
|
|
(விளக்கம்) அருவிகள் கொணர்ந்த அணிகலன் என்க. அமலை அருவி என மாறுக. அமலை -
ஆரவாரம். தானை - படை. தன்னிற் கூட்டப்பட்ட நீரையுடைய சிற்றாறுகளாகிய
தானை என்க. வழியிலே வந்து கூடுஞ் சிற்றாற்று நீர் அதன் ஆற்றலை
மிகுவித்தலின் தானை என்றார். பெருகுபு - பெருகி.
|