உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
51 நருமதை கடந்தது
 
         
    35    பன்மலைப் பிறந்த தண்ணிற வருவிய
          அமலை யருங்கல மடக்குபு தழீஇத்
          தன்னிற் கூட்டிய தானைச் செல்வமொ
          டிருகரை மருங்கினும் பெருகுபு தழீஇ
 
               (இதுவுமது)

               35 - 38: பன்மலை............தழீஇ

 
(பொழிப்புரை) மேலும் பல்வேறு மலைகளினும் தோன்றிய ஆரவாரமும் குளிர்ந்த நிறமும் உடைய அருவிகள் கொணர்ந்த அணிகலன்களையும் தன்னுள்ளடக்கிக் கொண்டு தன்பால் வந்து கலக்கும் ஏனைச் சிற்றாறுகளாகிய துணைப்படையோடுஞ் செல்வத் தோடும் தனது இரண்டு கரையிடையே பெருகி அவற்றைத் தழுவிக் கொண்டென்க.
 
(விளக்கம்) அருவிகள் கொணர்ந்த அணிகலன் என்க. அமலை அருவி என மாறுக. அமலை - ஆரவாரம். தானை - படை. தன்னிற் கூட்டப்பட்ட நீரையுடைய சிற்றாறுகளாகிய தானை என்க. வழியிலே வந்து கூடுஞ் சிற்றாற்று நீர் அதன் ஆற்றலை மிகுவித்தலின் தானை என்றார். பெருகுபு - பெருகி.