(பொழிப்புரை) செவ்வரியோடிய
மதர்த்த தனது குளிர்ந்த கண்களிலே துயில் மயக்கம் எய்தப்பெற்ற அழகிய
மாமை நிற முடைய வாசவதத்தையைத் திட்பமுறத் தழுவிக்கொண்டு விரைந்து
செல்லும் பிடியின் வேகத்தைத் தணித்துக்கொண்டு உதயணகுமரன்
மலையின்மிசை யேறாநின்ற அரிமான் போன்று மெல்லக் கரிய நீரை யுடைய
அந்நருமதையாற்றை அத்துறையிற் சென்று கடந்து அதன் மறு கரையின் மேலே
ஏறினன் என்க.