(விளக்கம்) தோற்பரம்
- தோல் போர்த்த கிடுகு. அப்புப் புதை - அம்புக்கட்டு. சிலை - வில்.
இவையெல்லாம் சிற்பம் என்பார் செப்புறச் செய்த என்றார். செப்பு -
செப்பம். புகழ் எனினுமாம். எட்டுவகைப்பட்ட படையையுடைய எட்டுத் தடக்கை
யென்க. இவ்வெட்டுப் படைகளையும், "பட்டய மெடுத்தொருகை
பத்திர மெடுத்தொருகை பற்றுமழுவும், சொட்டையு மெடுத்திருகை சக்கர
மெடுத்தொருகை சுற்று மயிலும், வட்டமு மெடுத்திருகைவச்சிர மெடுத்தொருகை
மற்கரதலம், எட்டினும் விதிர்ப்பன சுழற்றுவன வெந்தழ லெழுந்தெரியவே"
எனவரும் அரிச்சந்திர புராணத்தானும் (விவாக. 117.) உணர்க.
கண்மணி - உருத்திராக்கமணி. பச்சைக்கிளி பாற் கிளி எனத் தனித்தனி கூட்டுக.
கோட்டம் - கோயில். சிறை -
பக்கம்.
|