| உரை | 
|  | 
| 1. உஞ்சைக்காண்டம் | 
|  | 
| 53. பிடி வீழ்ந்தது | 
|  | 
| தாழிற் 
      றாழ்ந்து சூழிற் சூழியல் அந்த ணாளனொடு மந்திரம் 
      விரும்ப
 வஞ்சமி னண்பின் வயந்தக னுரைக்கும்
 105    நஞ்சம் பொதிந்து நமக்கும் 
      பிறர்க்கும்
 அஞ்சல் செல்லா வரணகம் 
      வலித்துக்
 காட்டகத் துறையுங் கடுவினை 
      வாழ்க்கை
 வேட்டுவர் பயின்ற விடமற் றிந்நிலம்
 | 
|  | 
| (வயந்தகன் 
      கூற்று) 102 - 108: தாழில்..........இந்நிலம்
 | 
|  | 
| (பொழிப்புரை)  தான் 
      துன்புற்றுத் தாழ்ந்துவிடத்தே தானும் துன்புற்றுத் தாழ்ந்தும் தான் 
      இன்புற்றுத் தழைக்குமிடத்தே தானு மின்புற்றுத் தழைக்கும்
 நல்லியல்புடைய 
      பார்ப்பனமகனாகிய அவ்வயந்தகனோடு ஆராய்தலை
 அவ்வுதயணன் விரும்பி 
      நிற்றலானே வஞ்சமில்லாத நல்ல நட்பினையுடைய
 அவ்வயந்தகன் கூறுவான் 
      :--'காவலனே ! நஞ்சுபோன்ற தீயபண்புகளை
 நெஞ்சத்தே வைத்து 
      மறைத்துக்கொண்டு நமக்கும் நம் `போன்ற பிறமன்னர்க்கும்
 அஞ்சுதல் 
      வேண்டாத அரண்களின் உள்ளிடத்தே வன்மையுற்று இக்காட்டகத்தே
 வதிகின்ற 
      தீவினை வாழ்க்கையையுடைய வேடர்கள் மிகவும் பயிலா நின்ற
 இடமாகும் இந்த 
      இடம் என்க.
 | 
|  | 
| (விளக்கம்)  தாழ்தல் - 
      துன்புற்றுத்தாழ்தல். சூழ்தல் - இன்பத்தாற் கிளர்ச்சியுறுதல் என்க. 
      அந்தணாளன் : வயந்தகன். மந்திரம் - சூழ்ச்சி.
 நஞ்சம் - நஞ்சனைய 
      தீமைகள். கடுவினை - தீவினை.
 |