உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
53. பிடி வீழ்ந்தது
 
            தாழிற் றாழ்ந்து சூழிற் சூழியல்
           அந்த ணாளனொடு மந்திரம் விரும்ப
           வஞ்சமி னண்பின் வயந்தக னுரைக்கும்
     105    நஞ்சம் பொதிந்து நமக்கும் பிறர்க்கும்
           அஞ்சல் செல்லா வரணகம் வலித்துக்
           காட்டகத் துறையுங் கடுவினை வாழ்க்கை
           வேட்டுவர் பயின்ற விடமற் றிந்நிலம்
 
                 (வயந்தகன் கூற்று)
             102 - 108: தாழில்..........இந்நிலம்
 
(பொழிப்புரை) தான் துன்புற்றுத் தாழ்ந்துவிடத்தே தானும் துன்புற்றுத்
  தாழ்ந்தும் தான் இன்புற்றுத் தழைக்குமிடத்தே தானு மின்புற்றுத் தழைக்கும்
  நல்லியல்புடைய பார்ப்பனமகனாகிய அவ்வயந்தகனோடு ஆராய்தலை
  அவ்வுதயணன் விரும்பி நிற்றலானே வஞ்சமில்லாத நல்ல நட்பினையுடைய
  அவ்வயந்தகன் கூறுவான் :--'காவலனே ! நஞ்சுபோன்ற தீயபண்புகளை
  நெஞ்சத்தே வைத்து மறைத்துக்கொண்டு நமக்கும் நம் `போன்ற பிறமன்னர்க்கும்
  அஞ்சுதல் வேண்டாத அரண்களின் உள்ளிடத்தே வன்மையுற்று இக்காட்டகத்தே
  வதிகின்ற தீவினை வாழ்க்கையையுடைய வேடர்கள் மிகவும் பயிலா நின்ற
  இடமாகும் இந்த இடம் என்க.
 
(விளக்கம்) தாழ்தல் - துன்புற்றுத்தாழ்தல். சூழ்தல் - இன்பத்தாற்
  கிளர்ச்சியுறுதல் என்க. அந்தணாளன் : வயந்தகன். மந்திரம் - சூழ்ச்சி.
  நஞ்சம் - நஞ்சனைய தீமைகள். கடுவினை - தீவினை.