உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
53. பிடி வீழ்ந்தது
 
         
     125    பொற்றார் வேந்தன் பூங்கொடிப் பாவையைச்
           செவ்விதிற் றேர்ந்து கைவிரல் கூப்பித்
           தோழி காஞ்சனை தோன்றக் கூறிக்
 
                (காஞ்சனை செயல்)
             125 - 127: பொற்றார்...........கூறி
 
(பொழிப்புரை) பொன் மாலையணிந்த பிரச்சோதன மன்னனுடைய
  செல்வியாகிய பூங்கொடிபோலும் வாசவதத்தையைத் தோழியாகிய
  காஞ்சன மாலை செவ்விதாக ஆராய்ந்து துயிலெழுப்பித் தனது
  கைவிரல்களைக் கூப்பி வணங்கி விளக்கமாகக் கூறாநிற்ப என்க.
 
(விளக்கம்) அவனுரைத்த மாற்றத்தை (124) பாவையைத் தேர்ந்து
  காஞ்சனை கை கூப்பிக் கூற என்க. வேந்தன் : பிரச்சோதனன்.
  பாவை : வாசவதத்தை. துயிலெழுப்பித்தேர்ந்து என்க. தேர்தலாவது
  துயில் மயக்கந்தீர்ந்து செவ்வியளாதலை அறிதலென்க, கூறி - கூற
  என்க.