உரை |
|
1. உஞ்சைக்காண்டம் |
|
53. பிடி வீழ்ந்தது |
|
125 பொற்றார் வேந்தன்
பூங்கொடிப்
பாவையைச் செவ்விதிற்
றேர்ந்து கைவிரல்
கூப்பித் தோழி
காஞ்சனை தோன்றக் கூறிக் |
|
(காஞ்சனை
செயல்)
125 - 127: பொற்றார்...........கூறி |
|
(பொழிப்புரை) பொன்
மாலையணிந்த பிரச்சோதன மன்னனுடைய செல்வியாகிய பூங்கொடிபோலும்
வாசவதத்தையைத் தோழியாகிய காஞ்சன மாலை செவ்விதாக ஆராய்ந்து
துயிலெழுப்பித் தனது கைவிரல்களைக் கூப்பி வணங்கி விளக்கமாகக் கூறாநிற்ப
என்க. |
|
(விளக்கம்) அவனுரைத்த
மாற்றத்தை (124) பாவையைத் தேர்ந்து காஞ்சனை கை கூப்பிக் கூற என்க.
வேந்தன் : பிரச்சோதனன். பாவை : வாசவதத்தை. துயிலெழுப்பித்தேர்ந்து
என்க. தேர்தலாவது துயில் மயக்கந்தீர்ந்து செவ்வியளாதலை அறிதலென்க,
கூறி - கூற என்க. |