உரை |
|
1. உஞ்சைக்காண்டம் |
|
53. பிடி வீழ்ந்தது |
|
மணங்கமழ்
நறுந்தார் மன்ன குமரன் 170
வயந்தகற் குரைக்கும் வாலிழை
வருந்தினள்
இயங்குதல் செல்லா திருக்குமிடங் காணெனக் |
|
(உதயணன்
கூற்று)
169 - 171: மணம்............காணென |
|
(பொழிப்புரை) வாசவதத்தையின் வழிநடை வருத்தங்கண்ட மணங்கமழா நின்ற நறிய மலர்
மாலையினையுடைய வேந்தன் மகனாகிய உதயணகுமரன் வயந்தகனை நோக்கிக் கூறுவான்
'நண்ப ! தூய அணிகலன்களையுடைய வாசவதத்தை பெரிதும் வருந்தினள்;
இனி நடத்தல் கூடாது; ஆதலின் அண்மையிலேயே யாம் தங்கியிருத்தற்
கேற்றதோரிடத்தைக் காண்பாயாக!' என்று கூற என்க. |
|
(விளக்கம்) மன்ன குமரன் :
உதயணன். வாலிழை ; வாசவதத்தை . இயங்குதல் செல்லாது - இயங்குதல் கூடாது.
இருக்குமிடம் - கரந்துறைதற் கேற்றவிடம். |