| உரை | 
|  | 
| 1. உஞ்சைக்காண்டம் | 
|  | 
| 53. பிடி வீழ்ந்தது | 
|  | 
| மணங்கமழ் 
      நறுந்தார் மன்ன குமரன் 170    
      வயந்தகற் குரைக்கும் வாலிழை 
      வருந்தினள்
 இயங்குதல் செல்லா திருக்குமிடங் காணெனக்
 | 
|  | 
| (உதயணன் 
      கூற்று) 169 - 171: மணம்............காணென
 | 
|  | 
| (பொழிப்புரை)  வாசவதத்தையின் வழிநடை வருத்தங்கண்ட மணங்கமழா நின்ற நறிய மலர் 
      மாலையினையுடைய வேந்தன்
 மகனாகிய உதயணகுமரன் வயந்தகனை நோக்கிக் கூறுவான் 
      'நண்ப !
 தூய அணிகலன்களையுடைய வாசவதத்தை பெரிதும் வருந்தினள்;
 இனி நடத்தல் கூடாது; ஆதலின் அண்மையிலேயே யாம் தங்கியிருத்தற்
 கேற்றதோரிடத்தைக் காண்பாயாக!' என்று கூற என்க.
 | 
|  | 
| (விளக்கம்)  மன்ன குமரன் : 
      உதயணன். வாலிழை ; வாசவதத்தை . இயங்குதல் செல்லாது - இயங்குதல் கூடாது. 
      இருக்குமிடம் - கரந்துறைதற்
 கேற்றவிடம்.
 |