(விளக்கம்) முள்ளங்கோடு -
முள்ளையுடைய வளார். ஊழிலை - உதிர்ந்த சருகு. வள்ளிலை - பெரிய இலை.
வாடல் வாடியுதிர்ந்த மலர்; இலையும் வாடலும் என்க அடைப்பள்ளி -
இலையாலாய படுக்கை. வளைத்தோளி: வாசவதத்தை அமர்துயில்: வினைத்தொகை.
பொய்கையும் நிழலும் தமக்கு வலியாக என்க.
53. பிடி வீழ்ந்தது முற்றிற்று. |