| (விளக்கம்)  இற்றை நாள் வன்பாலையில் 
      இலவின்கீழ்க்   கரந்துறையும் வாசவதத்தை பண்டு நிகழ்ந்த 
      மாலைப்பொழுதுகளிலே   எய்திய இன்பத்தை ஆசிரியர் ஈண்டு நினைவூட்டி நம் 
      அவலக் சுவையைக்   மிகச் செய்கின்றார்.        கேள்வி 
      - நூற் கேள்வி. தந்தொழில் என்றது இறை வணக்கம் முதலிய   மாலைக் கடனை. 
      பூம்பள்ளி - மலர்ப் படுக்கை. மழலை - இனிமை. புறவு -   புறா. வெள்ளி 
      வெண்மாடம் என்றது மாடப் புரைகளை பள்ளி கொள்ளும்   மாலை, சுடர் விளங்கும் 
      மாலை எனத் தனித்தனி கூட்டுக. பசும் பொனகர்   என்றது அமராவதியை. விசும்பு 
      என்பதன் ஈறு தொக்கது. விசும்பு பூத்ததுபோல்   எனத் திருத்திக் 
      கோடலுமாம். |