(விளக்கம்) இற்றை நாள் வன்பாலையில்
இலவின்கீழ்க் கரந்துறையும் வாசவதத்தை பண்டு நிகழ்ந்த
மாலைப்பொழுதுகளிலே எய்திய இன்பத்தை ஆசிரியர் ஈண்டு நினைவூட்டி நம்
அவலக் சுவையைக் மிகச் செய்கின்றார். கேள்வி
- நூற் கேள்வி. தந்தொழில் என்றது இறை வணக்கம் முதலிய மாலைக் கடனை.
பூம்பள்ளி - மலர்ப் படுக்கை. மழலை - இனிமை. புறவு - புறா. வெள்ளி
வெண்மாடம் என்றது மாடப் புரைகளை பள்ளி கொள்ளும் மாலை, சுடர் விளங்கும்
மாலை எனத் தனித்தனி கூட்டுக. பசும் பொனகர் என்றது அமராவதியை. விசும்பு
என்பதன் ஈறு தொக்கது. விசும்பு பூத்ததுபோல் எனத் திருத்திக்
கோடலுமாம்.
|