(விளக்கம்) வாசவதத்தை பண்டு நிகழ்ந்த
இத்தகைய மாலைப்பொழுதுகளிலே தந்தை மனையில் முற்றத்து ஆடியும்
அயிலாமலும் செவியிற் கேட்கும் இன்பத்தை இற்றை நாள் இம்மாலைப்
பொழுதின் நுகராமல் என்க. யானை முதலியவற்றைப்
பற்றிய தந்துரைக்கிளவி என்க. தந்துரைக்கிளவி - கட்டுக்
கதை. தோழிமார் இத்தகைய கதைகளை நன்கு பயின்று முதிர்ந்தவர் என்பார்,
தந்துரை முடிந்த ஆயம் என்றார். அவர் தொழிலாகலின் - தந்துரை எனப்பட்டது .
நொடி - பொருளொடு புணர்ந்த நகை மொழி; விடுகதை முதலியன என்க. செல்வம்
இன்பத்திற்கு ஆகு பெயர்.
|