| உரை | 
|  | 
| 1. உஞ்சைக்காண்டம் | 
|  | 
| 54. வயந்தகன் அகன்றது | 
|  | 
| 125   சேக்கையு ணின்றுநீ சென்ற 
      செலவும்
 வாய்ப்பக் 
      கூறி வாட்படை 
      தொகுத்து
 வையம் 
      பூட்டி வழிவரல் 
      விரைந்தென்
 எவ்வந் தீர விருள்கழி 
      காலைக்
 கோற்குறி 
      யெல்லையுட் குறிவழி வம்மென
 130   
      வாட்டிறல் வத்தவன் வயந்தகற் போக்கிப்
 | 
|  | 
| (இதுவுமது) 125 - 
      130: சேக்கை..........போக்கி
 | 
|  | 
| (பொழிப்புரை)  இவ்விடத்தினின்றும் 
      நீ செல்லாநின்ற   இச் செலவின் காரணத்தையும் இடபகனுக்கு நன்கு 
      விளக்கமாகக் கூறி   வாளேந்திய படைகளைக் கூட்டிக் கொண்டு தேர்முதலிய 
      ஊர்திகளையும்    பூட்டிக்கொண்டு மீண்டு வருங்கால் வழியினும் விரைந்து 
      வருக ! ஈண்டு   என் துன்பந்தீரும்படி இற்றை இரவின் இருள் புலராநின்ற 
      விடியற்காலத்தில்   இவ்விடத்தினின்றும் அம்பு பாயும் எல்லைக்குள் குறித்த 
      வழியிலே வருவாயாக,   என்று கூறி வாட்போர் ஆற்றல் மிக்க உதயணன் 
      அவ்வயந்தகனைப்   போக்கி என்க. | 
|  | 
| (விளக்கம்)  செலவும் - செலவிற்குரிய 
      காரணமும் என்க.   வையம் - என்றது தேர் முதலிய ஊர்தி என்னும் 
      பொருள்படநின்றது.   வழிவிரைந்து வரல் என மாறுக. வரல் - வியங்கோள். 
      எவ்வம் - துன்பம்.   கோல் - அம்பு. வம் - வருதி. வத்தவன் - 
      உதயணன். |