(விளக்கம்) துஞ்சல்செல்லான் -
ஒருசொல். பாலைநிலத்தி லிருத்தற்கேற்ப விடலை என்றார். விடலை -
பாலைத்திணைத் தலைமகன். கோம்பி - பச்சோந்தி. மயில் கோம்பிக்கு
அஞ்சுமென்பதனைக் 'கோம்பிக் கொதுங்கி மேயா மஞ்ஞை' எனவரும் மணிவாசகர்
பொன் மொழி யானும் (திருச்சிற். 21) அறிக.
54. வயந்தகன் அகன்றது முற்றிற்று.
|