(விளக்கம்) கோலவுரு - காண்போர் கண்கவரும் அழகிய
உருவம். கானத்தோர் - காட்டிலுறைவோர். பன்முகத்தானும் - பலதிசைகளினும்.
வின்முகம் - வில்லின் எதிரே. பற்று - மறைந்துய்தற்கு இயன்ற புகலிடம்.
புட்கூற்றாளன் - நிமித்திகன். உட்கூற்று - தமக் குள்ளேயே தோன்றிய
கூற்றுவன். கழறி - இடித்துரைத்து. உளை - பிடரிமயிர். வலிப்பது - பற்றிக்
கொள்வது. தெரிந்து - ஆராய்ந்து கொண்டு.
55. சவரர் புளிஞர் வளைந்தது
முற்றிற்று.
|