உரை |
|
1. உஞ்சைக்காண்டம் |
|
56. வென்றி யெய்தியது |
|
மாழ்கிய மாதரை வாங்குபு
தழீஇக்
கனவளைப் பணைத்தோட் காஞ்சன மாலை
120 புனவளைத் தோளி பொழிலகங்
காவனம்
பெருமான் செல்வம் பேணாய்
மற்றிவ்
வரிமா னன்னோற் காருயிர்
கொடீஇய
போந்தனை யோவெனத் தான்பா
ராட்டி
இரங்குவது நோக்கி யிறைமகன் கூறும
|
|
(காஞ்சனை
வருந்தல்)
118 - 124: மாழ்கிய..........கூறும்
|
|
(பொழிப்புரை) கனவிய வளையலணிந்த
மூங்கில்போன்ற தோளையுடைய காஞ்சனமாலை இங்ஙனம் மயங்கிய
வாசவதத்தையைத் தன் கையாற்றாங்கித் தழுவிக் கொண்டு நீரிற் றோன்றிய
சங்க வளையலை யணிந்த தோளினையுடைய எம்மிறை மகளே ! உலகத்தைக் காவல்
பூண்ட நம்பெருமானுடைய சிறந்த செல்வங்களைப்
பொருட்படுத்தாமல் அந்தோ ! இந்த அரிமான் போலும் உதயணன் பொருட்டு
இவ்வேடர்பால் உயிர் கொடுக்கத்தான் ஈங்கு வந்தாயோ? என்று கூறிப்
பாராட்டி இரங்குதலைக் கோமகனாகிய உதயணன் பார்த்து வேடரை நோக்கிக்
கூறுவான்; என்க.
|
|
(விளக்கம்) மாதர்
- வாசவதத்தை. பொழில் - உலகம் : ஆகு பெயர். நம்பெருமான் -
பிரச்சோதனன். அரிமானன்னோன் - உதயணன். கொடீ இய -
கொடுக்க. தான் - அசை. இறைமகன் :
உதயணன்.
|