| உரை | 
|  | 
| 1. உஞ்சைக்காண்டம் | 
|  | 
| 56. வென்றி யெய்தியது | 
|  | 
| மாழ்கிய மாதரை வாங்குபு 
      தழீஇக்
 கனவளைப் பணைத்தோட் காஞ்சன மாலை
 120    புனவளைத் தோளி பொழிலகங் 
      காவனம்
 பெருமான் செல்வம் பேணாய் 
      மற்றிவ்
 வரிமா னன்னோற் காருயிர் 
      கொடீஇய
 போந்தனை யோவெனத் தான்பா 
      ராட்டி
 இரங்குவது நோக்கி யிறைமகன் கூறும
 | 
|  | 
| (காஞ்சனை 
      வருந்தல்) 118 - 124: மாழ்கிய..........கூறும்
 | 
|  | 
| (பொழிப்புரை)  கனவிய வளையலணிந்த 
      மூங்கில்போன்ற   தோளையுடைய காஞ்சனமாலை இங்ஙனம் மயங்கிய   
      வாசவதத்தையைத் தன் கையாற்றாங்கித் தழுவிக் கொண்டு   நீரிற் றோன்றிய 
      சங்க வளையலை யணிந்த   தோளினையுடைய எம்மிறை மகளே ! உலகத்தைக் காவல் 
        பூண்ட நம்பெருமானுடைய சிறந்த செல்வங்களைப்   
      பொருட்படுத்தாமல் அந்தோ ! இந்த அரிமான் போலும்   உதயணன் பொருட்டு 
      இவ்வேடர்பால் உயிர் கொடுக்கத்தான்   ஈங்கு வந்தாயோ? என்று கூறிப் 
      பாராட்டி இரங்குதலைக்   கோமகனாகிய உதயணன் பார்த்து வேடரை நோக்கிக் 
        கூறுவான்; என்க. | 
|  | 
| (விளக்கம்)  மாதர் 
      - வாசவதத்தை. பொழில் - உலகம் :   ஆகு பெயர். நம்பெருமான் - 
      பிரச்சோதனன்.   அரிமானன்னோன் - உதயணன். கொடீ   இய - 
      கொடுக்க. தான் - அசை.   இறைமகன் : 
உதயணன். |