| (விளக்கம்)  அரசற்குரியன 
      என்று நூல்கள் கூறும்   முறைமையினாலே என்க. இவற்றை,           "படையுங் கொடியும் 
      குடையும் 
      முரசும்நடைநவில் 
      புரவியும் களிறுந் 
      தேரும்
 தாரும் 
      முடியும் நேர்வன 
      பிறவும்
 தெரிவுகொள் செங்கோல் அரசர்க் குரிய"
   எனவரும் தொல்காப்பியத்தினுங் (மரபியல் - 72.) காண்க. ஒளிப் படலம் - 
        ஒளிக்கற்றை. வள்ளி - கொடி. முகடு - உச்சி. துளங்கு கதிர் 
      நித்திலத்தரளக்  கோவை என மாறுக. நித்திலத்தரளம்-நித்தில மாகிய தரளம் 
      என்க. படவம்   - ஓரிசைக்கருவி. விதானம்-மேற்கட்டி. பேழ்-பெருமை. 
      வள்ளிப் போர்வை -  பூங்கொடி ஓவியம் பொறித்த 
  போர்வை.
 
 |