|
உரை | | 2. இலாவாண காண்டம் | | 1. நகர் கண்டது | | 20 இருள்கண்
புதைத்த இருங்கண்
ஞாலத்து.
விரிகதிர் பரப்பிய வெய்யோன் போல
வெங்கண் இருட்டுயர் இங்கண்
நீக்கிய
பொங்குமலர்த் தாரோய் புகுகென் போரும்
| | 20 - 23 ; இருள்கண்
புதைத்த...........புகுகென் போரும்
| | (பொழிப்புரை) பெரிய
இடத்தையுடைய உலகத்தே வாழும் உயிர்களின் கண்ணை மறைத்துத் துயர்
செய்யும் இருளினைத் தனது விரிந்த சுடரைப் பரப்பிப் போக்கி
இன்பஞ்செய்யும் ஞாயிறுபோல, இவ் வுலகத்தே தோன்றி உயிர்களினது வெவ்விய
இருள் போன்ற துயரத்தை நீக்கியருளிய பெருமானே வருக ! என்று பாராட்டுவாரும்
என்க. | | (விளக்கம்) 20, கண் - உயிர்களின்
கண்கள் என்க,. புதைத்தல்-மறைத்தல். இருங்கண் ஞாலம்-பெரிய
இடத்தையுடைய உலகம். ஞாலத்துத் தோன்றிப் பரப்பிய வெய்யோன் என்க.
21. வெய்யோன்-ஞாயிறு. 22,
பொருட்குக் கூறிய துயரத்தை உவமைக்கும் கூட்டி உயிர்களின் துயரத்தை
என்க, 23, பொங்குமலர் - தேன்மிக்குப் பொங்கும்
மலர்,
|
|