உரை
 
2. இலாவாண காண்டம்
 
1. நகர் கண்டது
 
            மாயோன் மார்பில் திருமகள் போலச்
            சேயோன் மார்பிற் செல்வம் எய்தற்கு
            நோற்ற பாவாய் போற்றெனப் புகழ்நரும்
 
        36 - 38 ;  மாயோன் மார்பில்,,,, ,,,,புகழ்நரும்
 
(பொழிப்புரை)  திருமால் மார்பின்கண் வீற்றிருந்து இன்பமுறுகின்ற திருமகள்போல முருகனை ஒத்த உதயணன் மார்பிற்றங்கி இன்பமுறுதற்கு முற்பிறப்பிலே தவஞ்செய்த நங்கையே எம்மைப் பாதுகாத்துருள்வாயாக ! என்று புகழ்வோரும்  என்க.
 
(விளக்கம்) 36.. மாயோன்-திருமால், பொருட்குக் கூறிய செல்வத்தை உவமைக்குங் கூட்டுக. செல்வம் - ஈண்டு இன்பம்.
    37. சேயோன்-உதயணன். உவம ஆகுபெயர்; முருகக் கட.வுளை ஒத்தவன் என்பது கருத்து. மார்பி.ற் செல்வம்-இன்பம். மார்பென்றது மெய்யை. "இவ்வாறெங்கும் விளையாடிஇளையான் மார்பின் நலம் பருகி" (சீவக. 2701)) என்றார் பிறரும்.
    போற்று - போற்றுக; எம்மைப் பாதுகாப்பாயாக, தமக்கு அரசியாகலின் அங்ஙனம் வேண்டினார்,