உரை |
|
2. இலாவாண காண்டம் |
|
1. நகர் கண்டது |
|
திருமலர்ச் செங்கண் செல்வன் தன்னொடு 40
பெருமகன் மடமகள் பின்வரக் கண்டனம்
உம்மைச் செய்த புண்ணியம்
உடையம்
இம்மையின் மற்றினி என்னா கியரென
அன்புறு கிளவியர் இன்புறு வோரும்
|
|
39 - 43 ;
திருமலர்ச் செங்கண்.........இன்புறுவோரும்
|
|
(பொழிப்புரை)
செந்தாமரைமலர்போன்ற சிவந்த அழகிய கண்களையுடைய நம் வேந்தனாகிய
உதயணனோடு பிரச்சோதன மன்னன் இளமகளாகிய வாசவதத்தை வருதலை
முற்பிறப்பிற்செய்த தவம் பெரிதுடையேமாகலிற் கண்டு மகிழ்ந்தேம், இனி
இப் பிறப்பிலே இதனினும் சிறந்த பேறு யாது எய்துதல் வேண்டும் ! என்று
அன்புடய மொழிகள் பல பேசி இன்பமடைவோரும் என்க.
|
|
(விளக்கம்) 39, திருமலர் என்றது
சிறப்பாலே தாமரை மலரைக்குறித்து நின்றது. என்னை ? ''பூவிற்குத்
தாமரையே'' என்பவாகலின். செங்கண் என்றமையால் செந்தாமரை என்க.
செல்வன் - அரசன். 40.
பெருமகன்-வேந்தன்; பிரச்சோதனன் மடமகள்; வாசவதத்தை. 41.
உம்மை-முற்பிறப்பு. புண்ணியம் - ஈண்டுத் தவம். 42. இம்மை -
இப் பிறப்பு. என்னாகியர் என்னும் வினா, சிறந்த பேற்றினைப்பெற்றேம்
இனி ஒன்றும் வேண்டேம் என்பதுபடநின்றது. 43, அன்புறு
கிளவி-அன்பு கெழுமிய மொழி.
|