|  | | உரை |  |  |  | 2. இலாவாண காண்டம் |  |  |  | 2, கடிக்கம்பலை |  |  |  | பொலிந்த சும்மையொடு பொன்னணி 
      மூதூர் மலிந்தகம் 
      புக்கபின் மண்பொறை 
      கூரப்
 பெறலரும் 
      பெருங்கிளை இறைகொண் 
      டீண்டி
 இன்மகிழ் 
      இருக்கை ஏயர் மகனொடு
 5    
      தண்மகிழ் நெடுங்குழல் தத்தொளித் 
      தாமத்து
 மதிக்கவின் அழித்த மாசறு 
      திருமுகத்
 தணிக்கவின் கொண்ட ஐயரித் தடங்கண்
 வனப்புவீற் றிருந்த வாசவ 
      தத்தை
 வதுவைச் 
      செல்வம் விதியிற் கூறுவென்
 |  |  |  | 1-9 ; 
      பொலிந்த சும்மையொடு..,..,..விதியிற் 
      கூறுவென் ( 
      1 முதல் 9 வரை புலவர் கூற்று,)
 |  |  |  | (பொழிப்புரை)    இங்ஙனமாக 
      ஆரவாரத்தோடு  உதயணன் வாசவதத்தையோடு சயந்தியின்கண் 
      மகிழ்ச்சிவிக்குப் புகுந்த பின்னர், அவன் பெருங்கேளிர் 
      நிலஞ்சுமக்கலாற்றாதபடி வந்து குழுமி உரையாநிற்ப, ஏயர் மரபினனாகிய அவ் 
      வுதயணனுக்கும், குழல் முதலியவற்றையுடைய வாசவதத்தைக்கும் நிகழ்ந்த 
      திருமணவிழாவின்பத்தை நூன்முறையானே கூறுவேன் கேண்மின்; என்று 
      கொங்குவேளிர் கூறுகின்றார் என்க, |  |  |  | (விளக்கம்)  இது நுதலிப்புகுதல் என்னும் உத்தி. 1.சும்மையொடு பொன் அணிபொலிந்த மூதூர் அகம் 
      மலிந்து புக்கபின் என இயைத்துக்கொள்க. சும்மை-ஆரவாரம், பொன் 
      முதலியவற்றால் ஒப்பனை செய்யப்பட்ட மூதூர் என்க, மூதூர் -
      ஈண்டுச் சயந்தி
 2.அகத்தின்கண் மகிழ்ச்சி மலிந்து 
      என்க. மண் - நிலம். பொறை - சுமை.
 3. 
      பெருங்கிளை - மிகுந்த உறவினர், இறைகொண்டு - தங்கி - ஈண்டு இறை 
      கொள்ளாநிற்ப என்க,
 4.இன்மகிழ் இருக்கை - இனிய 
      மகிழ்ச்சிக்குக் காரணமான இருக்கை. ஏயர்மகன் - ஏயர் குலத் தோன்றலாகிய 
      உதயணன்.
 5. தண்மகிழ் - குளிர்ந்த மகிழமலர் (மாலையினையுடைய, ஒளிதத்துதாமம் என மாறுக. ஒளிதாவும்   பொன்மாலையும் மணிமாலையும்  என்க. மாசின்மையானே மதியின் கவினை அழித்த திருமுகம் என்க.
 6. மதி-திங்கள். 7. திருமுகத்து அழகிற்கு மேலும் ,அழகாந்தன்மையுடைய கண்; "வனப்பின்மேலும்   வனப்புடைத்தாகி " என்பர் மேலும், (மகத - 12 ; 63.)
 7. ஐ - மென்மை, அரி-செவ்வரி. தடங்கண் - பெரிய கண்.
 8. வனப்பு - உறுப்பெல்லாம் திரண்டவழி உண்டாவதோர் அழகு. வீற்றிருத்தலாவது, அழிவின்றி   நிலைபெறுதல்.
 9. வதுவைச்செல்வம்-திருமணவின்பம். வீதி- நூன்முறை கேண்மின் என்பது சொல்லெச்சம்.
 | 
 |