| உரை | 
|  | 
| 2. இலாவாண காண்டம் | 
|  | 
| 2. கடிக்கம்பலை | 
|  | 
| அறைந்தறி வுறீஇய 
      பின்றை நிறைந்த பெரும்பெயர் மூதூர் விரும்புபு துவன்றிப்
 படையமை நெடுமதிற் கடைமுகந் 
      தோறும்
 பசும்பொன் தோரணம் விசும்புற நாட்டி
 அரும்பொன் தாரோ டணிகதிர் 
      முத்தின்
 60    இரும்பெருந் தாமம் 
      ஒருங்குடன் வளைஇ
 | 
|  | 
| 55-60; 
      பெரும் பெயர் மூதூர்....ஒருங்குடன் வளைஇ | 
|  | 
| (பொழிப்புரை)  நிறைந்த 
      பெரிய புகழினையுடைய அச்சயந்தி மாந்தர் அத்திருமண நிகழ்ச்சியைப் 
      பெரிதும் விரும்பிக் கூடிப்படயையுடைய நெடிய மதிலொடு கூடிய பெருவாயில் 
      தோறும், தோரணக் கம்பங்கள் வானைத் தீண்ட நட்டு, பொன் மாலைகளோடே 
      முத்து மாலைகளையும் ஒருங்கே வளைத்துக் கட்டி என்க. | 
|  | 
| (விளக்கம்)  56. பெரும் 
      பெயர் - பெரும் புகழ். விரும்புபு - விரும்பி; அத்திருமண நிகழ்ச்சியைப் 
      பெரிதும் விரும்பி என்க. துவன்றுதல் - குழு முதல். 57, படை- 
      காவற் படை. போர்க்கருவிகளுமாம், மதிலையுடைய கடை என்க. கடை - வாயில்
 59. அழகிய ஒளியையுடைய முத்தாலாய மிகப் பெரிய மாலைகளையும் 
      என்க, வளைஇ - வளைத்துக் கட்டி,
 |