உரை |
|
2. இலாவாண காண்டம் |
|
2. கடிக்கம்பலை |
|
அறைந்தறி வுறீஇய
பின்றை நிறைந்த
பெரும்பெயர் மூதூர் விரும்புபு துவன்றிப்
படையமை நெடுமதிற் கடைமுகந்
தோறும்
பசும்பொன் தோரணம் விசும்புற நாட்டி
அரும்பொன் தாரோ டணிகதிர்
முத்தின் 60 இரும்பெருந் தாமம்
ஒருங்குடன் வளைஇ
|
|
55-60;
பெரும் பெயர் மூதூர்....ஒருங்குடன் வளைஇ
|
|
(பொழிப்புரை) நிறைந்த
பெரிய புகழினையுடைய அச்சயந்தி மாந்தர் அத்திருமண நிகழ்ச்சியைப்
பெரிதும் விரும்பிக் கூடிப்படயையுடைய நெடிய மதிலொடு கூடிய பெருவாயில்
தோறும், தோரணக் கம்பங்கள் வானைத் தீண்ட நட்டு, பொன் மாலைகளோடே
முத்து மாலைகளையும் ஒருங்கே வளைத்துக் கட்டி என்க.
|
|
(விளக்கம்) 56. பெரும்
பெயர் - பெரும் புகழ். விரும்புபு - விரும்பி; அத்திருமண நிகழ்ச்சியைப்
பெரிதும் விரும்பி என்க. துவன்றுதல் - குழு முதல். 57, படை-
காவற் படை. போர்க்கருவிகளுமாம், மதிலையுடைய கடை என்க. கடை - வாயில்
59. அழகிய ஒளியையுடைய முத்தாலாய மிகப் பெரிய மாலைகளையும்
என்க, வளைஇ - வளைத்துக் கட்டி,
|