உரை
 
2. இலாவாண காண்டம்
 
2. கடிக்கம்பலை
 
         
    130     உண்ணுகுப் போலையுட் கண்விரித் தியற்றிய
           பாத சக்கா மாறெதிர் நீர்தரக்
           கோதைத் தாமமொடு கொட்டைமுதற் கோத்த
           இலங்கொளி முக்குடை எந்நிரத் தியங்க
 
        130-133;     உண்ணுகுப் போலையுள்.......ஏந்திரத்தியங்க
 
(பொழிப்புரை) பனையினது அகமடற்குருத்தினை விரித்து வட்ட வடிவினவாய்ச் செய்யப்பட்ட நீர்பொறிகள்  ஒன்றற் கொன்று மாறுபட்டு நீரினைச் சிதறாநிற்ப; மாலையோடு  பொகுட்டின்கண் கோக்கப்பட்ட ஒளியையுடைய முக்குடையும் பொறிகளாலே சுழலா நிற்பவும் என்க.
 
(விளக்கம்) 130. உள் நுகுப்பு ஓலையுள் - பனையினது அகமடற் குருத்தோலையுள்.
    131. பாதசக்கரம் - பாதம் வைக்கப்பட்ட சக்கர வடிவிற்றாய தொரு நீர் சிதறும் இயந்திரம் என்க.
    132,கொட்டை - தாமரை மலர் ,அகத்துள்ள பொகுட்டு, தாமரைப் பொகுட்டுப் போன்று செய்யப்பட்ட பீடத்திலே கோக்கப்பட்ட காம்பையுடைய முக்குடை என்க. முக்குடைகளாவன - சந்திராதித்தம், நித்த விநோதம்,சகலபாசனம் என்பன.