|
உரை | | 2. இலாவாண காண்டம் | | 2. கடிக்கம்பலை | | அறிவர் சரித முறையிற் சுட்டி 135
உரையும் ஓத்தும் புரையாப் புலமைப்
பெரியோர் நடாவுந் திரியாத்
திண்ணெறி ஒராஅ
உலகிற் கோங்குபு வந்த
அராஅந் தாணத் தருச்சனைக் கம்பலும்
| | 134 - 138. அறிவர்
சரிதம்...........அருச்சனைக் கம்பலும்
| | (பொழிப்புரை) உரையானும்
ஓதற்றொழிலானும் ஒப்பற்ற புலமையையுடைய சான்றோர்கள் மாறுபடாத திண்ணிய
மெய்ந் நெறிச் செலவினையுடையராய் இவ்வுலகம் உயரும் பொருட்டு வந்து
அவதாரஞ் செய்த தீர்த்தங்கரர் முதலிய அறிவருடைய வரலாற்றினைக்
கூறாநிற்பவும் மாந்தர் அருக்கடவுளை அருச்சிக்கவும் இவ்வாற்றான் எழுந்த
ஆரவாரமும் என்க,
| | (விளக்கம்) 134, அறிவர்
- தீர்த்தங்கரர், முதலிய சான்றோர். உரை - சொல்வன்மை. ஓத்து -
கல்வி. புரையாப் புலமை - ஒப்பில்லாத புலமை. அரா அந்தாணம் - அருகன்
கோயில், (117) மங்கலப் பெருங் கொடியை (129) நீலக்காழ்மிசை மாட்டி
ஒப்பனை செய்யப்பட்ட (138) அரா அந்தாணத்தின்கண் பெரியோர் அறிவர்
சரிதம் சுட்டி நடாவுதலானும், மக்கள் அருகக்கடவுளை அருச்சித்தலானும்
எழுந்த ஆரவாரமும் என இயைபு காண்க, 139 முதல்
157 - வரை ஒரு தொடர், இதன்கண் சேரிகளை அணிசெய்தல் கூறப்படும்.
|
|