|  | | உரை |  |  |  | 2. இலாவாண காண்டம் |  |  |  | 2. கடிக்கம்பலை |  |  |  | அறிவர் சரித முறையிற் சுட்டி 135    
      உரையும் ஓத்தும் புரையாப் புலமைப்
 பெரியோர் நடாவுந் திரியாத் 
      திண்ணெறி
 ஒராஅ 
      உலகிற் கோங்குபு வந்த
 அராஅந் தாணத் தருச்சனைக் கம்பலும்
 |  |  |  | 134 - 138. அறிவர் 
      சரிதம்...........அருச்சனைக் கம்பலும் |  |  |  | (பொழிப்புரை)  உரையானும் 
      ஓதற்றொழிலானும் ஒப்பற்ற புலமையையுடைய சான்றோர்கள் மாறுபடாத திண்ணிய 
      மெய்ந் நெறிச் செலவினையுடையராய் இவ்வுலகம் உயரும் பொருட்டு வந்து 
      அவதாரஞ் செய்த தீர்த்தங்கரர் முதலிய அறிவருடைய வரலாற்றினைக் 
      கூறாநிற்பவும் மாந்தர் அருக்கடவுளை அருச்சிக்கவும் இவ்வாற்றான் எழுந்த 
      ஆரவாரமும் என்க, |  |  |  | (விளக்கம்)  134, அறிவர் 
      - தீர்த்தங்கரர், முதலிய சான்றோர். உரை - சொல்வன்மை. ஓத்து - 
      கல்வி. புரையாப் புலமை - ஒப்பில்லாத புலமை. அரா அந்தாணம் - அருகன் 
      கோயில், (117) மங்கலப் பெருங் கொடியை (129) நீலக்காழ்மிசை மாட்டி 
      ஒப்பனை செய்யப்பட்ட (138) அரா அந்தாணத்தின்கண் பெரியோர் அறிவர் 
      சரிதம் சுட்டி நடாவுதலானும், மக்கள் அருகக்கடவுளை அருச்சித்தலானும் 
      எழுந்த ஆரவாரமும் என இயைபு காண்க, 139 முதல் 
      157 - வரை ஒரு தொடர், இதன்கண் சேரிகளை அணிசெய்தல் கூறப்படும்.
 | 
 |