உரை
 
2. இலாவாண காண்டம்
 
2. கடிக்கம்பலை
 
           இடியுறழ் முரசின் இறைமகன் அணியும்
           முடியணி ஒழிய முற்றணிப் பெருங்கலம்
     160    யாவர் வேண்டினும் யாவரு மீமின்
           ஈத்ததின் இரட்டி கோத்தரு நுமக்கென
           நாற்பெருந் திசையு நகரங் காடியுள்
           வாய்த்த செய்தொழில் வாணிகர்க் கறையும்
           கோப்பெரு முதியர் வாய்ப்பறைக் கம்பலும்
 
        158 - 164; இடியுறழ் முரசின்,,,...வாய்ப்பறைக் கம்பலும்
 
(பொழிப்புரை) அரசன் மாத்திரம் அணியுந் தகுதியுடைய முடிக்கலன் ஒழிய, ஏனை .அணிகலன் ,அனைத்தையும்,யாவர் கேட்பினும் எல்லீரும் வழங்குமின் ! நுமக்கு நம் மன்னன் நீயிர் வழங்கியதினும் இருமடங்கு வழங்குவன் என்று, நகரத்தின்கண் நான்கு திசையினும் அமைந்த அங்காடியின்கண் தொழில் செய்யும் வணிகர்க்குத் தலைமைவாய்ந்த முதுவணிகர் வாய்ப் பறையறைந்து கூறுகின்ற ஆரவாரமும்; என்க,
 
(விளக்கம்) 161-2 முடிக்கலன் அரசர்க்குரிய அணியாகலின் அஃதொழிய என்றார். பெருங்கலம் - பேரணிகலன் ,
    160, யாவர் வேண்டினும் இரப்போர் தகுதியை அளவாது கொடுமின் என்றவாறு.
    161, கோ - அரசன்,
    162, அங்காடி - கடைத்தெரு.
    164. கோப் பெருமுதியர் என்றது வணிகர்குழுத் தலைமையாளரை,