|  | | உரை |  |  |  | 2. இலாவாண காண்டம் |  |  |  | 2. கடிக்கம்பலை |  |  |  | இடியுறழ் முரசின் இறைமகன் அணியும் முடியணி ஒழிய முற்றணிப் பெருங்கலம்
 160    யாவர் வேண்டினும் 
      யாவரு 
      மீமின்
 ஈத்ததின் இரட்டி கோத்தரு 
      நுமக்கென
 நாற்பெருந் திசையு நகரங் காடியுள்
 வாய்த்த செய்தொழில் வாணிகர்க் 
      கறையும்
 கோப்பெரு 
      முதியர் வாய்ப்பறைக் கம்பலும்
 |  |  |  | 158 - 164; இடியுறழ் முரசின்,,,...வாய்ப்பறைக் 
      கம்பலும் |  |  |  | (பொழிப்புரை)  அரசன் 
      மாத்திரம் அணியுந் தகுதியுடைய முடிக்கலன் ஒழிய, ஏனை .அணிகலன் 
      ,அனைத்தையும்,யாவர் கேட்பினும் எல்லீரும் வழங்குமின் ! நுமக்கு நம் 
      மன்னன் நீயிர் வழங்கியதினும் இருமடங்கு வழங்குவன் என்று, நகரத்தின்கண் 
      நான்கு திசையினும் அமைந்த அங்காடியின்கண் தொழில் செய்யும் 
      வணிகர்க்குத் தலைமைவாய்ந்த முதுவணிகர் வாய்ப் பறையறைந்து கூறுகின்ற 
      ஆரவாரமும்; என்க, |  |  |  | (விளக்கம்)  161-2 
      முடிக்கலன் அரசர்க்குரிய அணியாகலின் அஃதொழிய என்றார். பெருங்கலம் - 
      பேரணிகலன் , 160, யாவர் வேண்டினும் இரப்போர் தகுதியை 
      அளவாது கொடுமின் என்றவாறு.
 161, கோ - அரசன்,
 162, அங்காடி - கடைத்தெரு.
 164. 
      கோப் பெருமுதியர் என்றது வணிகர்குழுத் தலைமையாளரை,
 | 
 |