|
உரை | | 2. இலாவாண காண்டம் | | 2. கடிக்கம்பலை | | பொன்னணி கொண்டபூந்தண் சிகழிகைக் 225
கன்னி மகளிர் கண்அணங் குறூஉம்
ஒவ்வா அணியினர் ஒப்பக்
கூடி
மண்ணகக் கிழவற்கு மண்ணுநீர்
சுமக்கும்
புண்ணியம் உடையீர் போதுமின் ஈங்கென
வாயில் தோறும் வந்தேதிர்
கொள்ளப்
| | 224 - 229 பொன்னணி
கொண்ட,,,,..வந்தெதிர் கொள்ள
| | (பொழிப்புரை) பொன்னாலாகிய அணிகலன்களால் அழகு செய்யப்பட்ட சிகழிகையை உடையாரும்
கன்னிமைப்பருவத்தினரும் காண்போர் கண்ணை வருத்தும் ஒளியையுடைய பலவேறு
அணிகலன்களை அணிந்தவருமாய் உதயணனுக்கு மங்கல நீர் சுமத்தற்குரிய
புண்ணியமுடையீர் வருக என்று தம்மைத்தம்வாயிலிடத்தே சிலர் வந்து
எதிர்கொள்ளா நிற்ப என்க,
| | (விளக்கம்) 224.
சிகழிகை-கொண்டை. 225, காண்போர் கண்ணைக் கூசும்படி செய்யும் அணி;
ஒன்றினை ஒன்றொவ்வா அணி எனத் தனித்தனி கூட்டுக, 228,
போதுமின்-வம்மின் போதுமின் எனச் சிலர் வந்து எதிர்கொள்ள என்க.
|
|