| உரை | 
|  | 
| 2. இலாவாண காண்டம் | 
|  | 
| 4. ஆறாந்திங்கள் உடன்மயிர் களைந்தது | 
|  | 
| கருதியது 
      முடித்த கடிநாட் 
      கோலமொடு பருதி 
      ஞாயிற் றுருவொளி 
      திகழக்
 கலிகெழு 
      மூதூர் கைதொழு 
      தேத்த
 வலிகெழு 
      நோன்றாள் வந்தவர் இறைவன
 | 
|  | 
| 1 - 4; 
      கருதியது முடித்த.......வந்தவர் இறைவன் | 
|  | 
| (பொழிப்புரை)        வத்தவர் 
      இறைவனாகிய உதயணகுமரன் திருமணக் கோலத்தானும் ஞாயிற்று மண்டிலத்தின் 
      அழகிய ஒளி போன்ற தன் முகத்தினது இயற்கை ஒளியானும் திகழாநிற்ப 
      அவ்வழகுத் தோற்றத்தைக் கண்ட ஆரவாரமுடைய அச்சயந்தி 
      மக்கள் கைகுவித்து வணங்கா நிற்ப, என்க | 
|  | 
| (விளக்கம்)  வத்தவர் இறைவன் என்னும் 
      எழுவாய் (25-26) கட்டிலேற்றம் கடந்தபின் என்பதனோடு இயையும் 1. சயந்திமக்களாற் கருதிய கடிநாள், முடிக்கப்பட்ட பின்னர் என்க,
 2. பருதிஞாயி்று இருபெயரொட்டு. வட்ட வடிவிற்றாகிய ஞாயிறு எனினுமாம்.
 3, கலி -ஆரவாரம். மூதூர், சயந்தி ; 
      ஆகுபெயர்.
 4, வலிகெழு நோன்றாள் என்புழி மிக்க வலிபொருந்திய 
      தாள் என்க.
 5. வத்தவர் இறைவன் ; உதயணன்,
 5 - 25 ; இனி இடைப்பிறவரலாகப் பிரச்சோதனன் மாண்பும் அவன் 
       மனைவியர் மாண்பும் கூறப்படுகின்றன.
 |