உரை |
|
2. இலாவாண காண்டம் |
|
4. ஆறாந்திங்கள் உடன்மயிர் களைந்தது |
|
கலாஅய்க் கிடந்து கவ்விய
கொழுந்தின்
வள்ளியு மலருங் கொள்வழிக் கொளீஇ 85
வலமுறை வகுத்த நலமுறை நன்னகர்
|
|
83 - 85; கலாஅய்.....,நன்னகர்
|
|
(பொழிப்புரை) ஒன்றனொடு ஒன்று
பிணங்கிக் கிடந்து ஒன்றனை ஒன்று சுற்றிய கொழுந்தினையுடைய
பூங்கொடியுருவங்களையும் மலர் உருவங்களையும் ஏற்புழி வலஞ்சுற்று
முறையாக எழுதி இயற்றப்பட்டு அழகு குடியிராநின்ற நல்ல
மணவறையிடத்தே என்க.்க..
|
|
(விளக்கம்) 83. கலாஅய்-பிணங்கி ; பின்னி என்றவாறு. 84.
வள்ளி-பூங்கொடி. 85. நலம்-அழகு. நன்னகர் என்றது
மணவறையை.
|