உரை |
|
2. இலாவாண காண்டம் |
|
4. ஆறாந்திங்கள் உடன்மயிர் களைந்தது |
|
140 மணியறைந் தன்ன
மாண்இருங் குஞ்சி
அணிவலஞ் சுரிந்த அமைதிக்
கேற்ப வளர்பிறை
அன்ன மல்லிகைக்
கத்திகை கிளர்பொன்
போதொடு களையறப்
பிணித்த வாக்கமை
சிகைமுதற் பாற்பட அடைச்சி 145 மகரங்
கவ்விய மணிக்குழைக்
காதினர் தகரங்
கலந்த தண்ணறுஞ்
சாந்தினர் பானிற
வெண்டுகில் ஆனத்
தானையர் இறைமகற்
கியன்ற குறைவில்
செல்வமொ டந்தணர்
ஈண்டி அடித்துகள் ஆற்றி
|
|
( 140 - 160 அந்தணர் வாழ்த்துதல்
) 140 - 149 : மணியறைந் தன்ன
அந்தணர்...........ஈண்டி
|
|
(பொழிப்புரை) நீலமணியைப்
பதித்துவைத்தாற் போன்றகரிய நிறமாட்சியோடே வலம் சுரிந்த குஞ்சியின்
அமைதிக்குத்தகப் பொற்பூவோடே பிணைக்கப்பட்ட மல்லிகை மாலையினைச்
செருகிய திருத்தமுடைய சிகையினையும், மணிக்குழையையுடைய காதினையும்,
நறுஞ்சாந்தினையும், தானையினையும், உடைய அந்தணர் பலர் மன்னன்
மகனுக்குச் செய்யவேண்டிய பொருள்களானே குறைவிலராய் வந்து குழுமி என்க.
|
|
(விளக்கம்) 140.
மணி - நீலமணி. மாண் - மாட்சிமையுடைய. 141. அணி-அழகாக. சுரிந்த
-சுருண்ட. 142- பிறை-மல்லிகை மாலைக்குவமை. கத்திகை- மாலை. 143,
பொற்போது - பொற்பூ. பொற்போதொடு பிணைத்த மல்லிகைக் கத்திகை
என்க. 144. வாக்கு-திருத்தம். சிகை - குடுமி. பாற்பட -
கூறுபட. அடைச்சி - செருகி. செருகித் திருத்தமுற்ற சிகையினையுடைய
என்க. 145. இருமகரமீன் ஒன்றனை ஒன்று கவ்விக்.
கொண்டிருத்தல் போன்று இயற்றப்பட்ட மணிக்குழை
என்க. 146. தகரம் -
மயிர்ச்சாந்தம். 147. ஆனத்தானை ? ஆணத்தானை என்றும்
பாடம். தானை - ஆடை. 148. இறைமகன் ; .உதயணன். இறைமகனை
வாழ்த்துதற்கேற்ற அறிவுச் செல்வமுடையவர் எனினுமாம்,
|