|  | | உரை |  |  |  | 2. இலாவாண காண்டம் |  |  |  | 5. மண்ணூநீராட்டியது |  |  |  | மருப்புநிலைக் கந்தின் இருப்பெழுப் 
      போக்கி வயவர் 
      காக்கும் வாயிற் செல்வமொடு
 40    கயவர் 
      துன்னாக் கட்டிற் றாகிப்
 படையமை இட்டிகைப் படாமைப் 
      படுகால்
 இடமமைத் 
      தியற்றிய ஏந்துநிலைக் கோணத்துக்
 கழறுகால் அமைத்த கட்கின் 
      வாவியுள்
 |  |  |  | (மங்கல நீர்க் குளத்தின் 
      மாண்பு) 38 - 43 ;  
      மருப்புநிலைக்,,,,.,,,வாவியுள்
 |  |  |  | (பொழிப்புரை)  யானை மருப்பினாலே 
      தூண் இயற்றி அத்தூணின்கண் இரும்பினாலே ஏழுமரங்களமைத்து
      மறவராலே காக்கப்படுகின்ற வாயிலையுடைத்தாய்க் கயவர்கள் எஞ்ஞான்றும் 
      அணுகவியலாத காவலையுடைத்தாய்ச் செங்கல் படுக்கப்பட்ட படித்துறைகள் 
      இயற்றி உயர்ந்த நிலைகனையுடைய அவற்றின் கோணங்ளிலே இடிந்துரை பொறித்த 
      கம்பங்களையுடைத்தாய்க் காண்போர் கண்ணுக்கினிய அழகிய குளத்தின்கண் 
      என்க. |  |  |  | (விளக்கம்)  38. 
      மருப்பு- யானையின் எயிறு, கந்து.- தூண், எழு-தடைமரம். அகத்தே 
      நுழையுங்காலத்து மேலே எழுப்பப்படுதலால் எழு என்பது பெயராயிற்று. 
      'சீப்புள்ளுறுத்துத் திண்ணெழுப்  போக்கி ' என்றார் (1-43: 
      193.) உஞ்சைக்காண்டத்தும், 'எழுவுஞ் சீப்பும் முழுவிறல் கணையமும்' 
      என்றார் இளங்கோவடிகளாரும். (சிலப். 15;215.) 39, வாயிற் 
      செல்வம்-வாயிலாகிய செல்வம் என்க. அக்குளத்தின் நலத்திற் கேதுவாதல் 
      பற்றிச் செல்வம் எனப்பட்ட.து.
 40. கயவர்-நன்மை தீமை 
      வகுத்துணராது வேண்டியாங்கு. வேண்டியாங் கொழுகும் கீழ்மக்கள்.துன்னா-அணுகாத, 
      கட்டிற்று-   காவலையுடையது.
 41. படை-அடுக்கு. 
      இட்டிகை-செங்கல். பாடு-தளம்படுத்தல். படுகாலிடம் - படித்துறையிடம். 
      கோணம்-அப்படித்துறை,   மூலைகளில்.
 43. 
      கழறுகால்-இக்குளத்தின் நீரை மசுப்படுத்துவோர் இத்தண்டனை எய்துவர்
      என்றாற்போன்ற இடித்துரைகளாலே அச்சுறுத்து மொழிகள் பொறித்து நிறுத்தப்பட்ட 
      தூண்கள் என்க.
 'காப்புற வகுத்த கன்னியங் 
      கடிமனை யாப்புற வகுத்த போர்ப்பெருங்கோணத்துக் கழறுகால் அமைத்து' 
      என்றார் உஞ்சைக்   காண்டத்தும் (1 - 41, 266 - 
      268,)
 43. கட்கின் வாவி-கண்ணுக்கு இனிய குளம்.
 | 
 |