உரை
 
2. இலாவாண காண்டம்
 
5. மண்ணூநீராட்டியது
 
           
           பாஅய் அமைந்த பின்றைச் சேஎய்
           செல்வியிற் சேர்ந்து சிறப்பொடு வணங்கி
           எவ்வழி யோரும் ஏத்தினர் எதிர்கொள
           அவ்வழி இரீஇய பின்றை மெய்பெறச்
 
        61 - 64 ;  சேஎய்ச் செவ்வியிற்,,,,,,,,இரீஇய பின்றை
 
(பொழிப்புரை) முருகனை ஒத்த உதயணகுமரன்ஆண்டுள்ள ஏத்திறத்தாரும் தன்னைக் கைகூப்பி வணங்கி எதிர்கொள்ளும் படியாக அச் சித்திரநகரின்கட் சென்று இருந்தபின்னர் என்க.
 
(விளக்கம்) 61, சேஎய்; உவம ஆகுபெயர்; உதயணகுமரன்.
    62. செவ்வி. ஆண்டுச் செல்லவேண்டிய அமயம்,
    63, எவ்வழியோரும் - எத்திறத்தோரும்; என்றது ஐம்பெருங்குழு முதலிய பலவகைப்பட்ட மாந்தரும் என்றவாறு. ஏத்தினர். முற்றெச்சம். வணங்கி ஏத்தி எதிர்கொள என்க.
    64 அவ்வழி-அவ்விடம்; அச்சித்திர நகரின்கண்.