(விளக்கம்) 133.
வெய்யோன் - ஞாயிறு. கதிரொளி ; பண்புத்தொகை,வீசுவளி; வினைத்தொகை.
இவ்வடியோடே
"கறங்கு கால் புகா கதிரவன் ஒளிபுகா
மறலி மறம்புகாதினி வானவர் புகாரென்கை
வம்பே" ............
.....................
......................................
அறம்புகாதிந்த அணிமதிட்.கிடக்கைநின்
றகத்தின்"
(கம்ப-ஊர்தேடு, 23) எனவரும், கம்பநாடர் செய்யுளை ஒப்புக்
காண்க, அணிகலன் இருக்கு மண்டப மாகலின் அதன் திண்மையை
விதந்து கூறிற்று
134. இரும்பாலே
சுவரமைத்து அணிபெற்ற படுகாலையுடையது என்க. பணை -பருமை, படுகால்-படிக்கட்டு.
135. மேற்புறம் விளங்குமணி அமைந்த வேயுள் என மாறுக. வேயுள்-கூரை.
136. யாப்புறு-கட்டுதலுற்ற. 137, .கோப்பு - கோவை. விழுக்கலம்
- சிறந்த அணிகலன். ஏத்துவனர்; முற்றெச்சம்.
|