உரை
 
2. இலாவாண காண்டம்
 
6. தெய்வச் சிறப்பு
 
          வரிமான் மகர மகன்றில் யானை
          அரிமான் அன்ன மணிநிற எண்கினம்
    50    குழவிப் பாவையொ டழகுபெறப் புனைந்து
          பொருவில் பூதத் துருவுபட வரீஇ
 
        48- 51 ; வரிமான்...............வரீஇ
 
(பொழிப்புரை)  புலி முதலியவற்றின் உருவங்களோடு குழவிப் பாவை உருவங்களையும் ஒப்பற்ற பூதவுருவங்களையும் எழுதி என்க.
 
(விளக்கம்) 48. வரிமான்-புலி. மகரம்-ஒரு மீன், மகன்றில் - ஒரு பறவை.
    49. அரிமான் - சிங்கம். மணி நிற எண்கு இனம்- நீலமணி போன்ற நிறமுடைய கரடியினம்.
    50. சிறுமகவு வடிவமுடைய பாவை என்க.
    51. பொருவுஇல்-ஒப்பில்லாத. வரீஇ -எழுதி.