|  | | உரை |  |  |  | 2. இலாவாண காண்டம் |  |  |  | 6. தெய்வச் சிறப்பு |  |  |  | மரகத 
      மாலை நிரலமைத் திரீஇ எரிமலர்த் தாமரை இலங்கொளி எள்ளிய
 திருமணிக் கபோதஞ் செறியச் சேர்த்தி
 |  |  |  | 52 - 54; மரகதமாலை,.,,,,,,,..,,சேர்த்தி |  |  |  | (பொழிப்புரை)    மரகத மணிகளாற் 
      செய்த மாலைகளை நிரலாகக் கட்டி வைத்துப் பொற்றாமரை மலரினது 
      ஒளியைப்பழித்த ஒளியையுடைய அழகிய மணிகளா லியன்ற 
      கபோதங்களை நெருங்கச் சேர்த்து வைத்தென்க, |  |  |  | (விளக்கம்)  52. 
      இரீஇ-இருத்தி 53. எரி - தீ. தீயிலிட்டு உருக்கிச் செய்த 
      பொற்றாமரை மலர் என்க, இனி எரி போன்ற தாமரைமலர்
 எனினுமாம். எள்ளிய- இகழ்ந்த.
 54. மணிக் 
      கபோதம்-மணிகளாற் செய்த கபோதம் என்னும்  உறுப்பு, இதனைச் 
      சுவர்த்தலங்களின் வைக்கும் சித்திரக் கம்பி என்பர் சூடாமணி 
      நிகண்டாசிரியர் (3 - 61).
 | 
 |