|
உரை | | 2. இலாவாண காண்டம் | | 6. தெய்வச் சிறப்பு | | மரகத
மாலை நிரலமைத் திரீஇ
எரிமலர்த் தாமரை இலங்கொளி எள்ளிய
திருமணிக் கபோதஞ் செறியச் சேர்த்தி
| | 52 - 54; மரகதமாலை,.,,,,,,,..,,சேர்த்தி
| | (பொழிப்புரை) மரகத மணிகளாற்
செய்த மாலைகளை நிரலாகக் கட்டி வைத்துப் பொற்றாமரை மலரினது
ஒளியைப்பழித்த ஒளியையுடைய அழகிய மணிகளா லியன்ற
கபோதங்களை நெருங்கச் சேர்த்து வைத்தென்க,
| | (விளக்கம்) 52.
இரீஇ-இருத்தி 53. எரி - தீ. தீயிலிட்டு உருக்கிச் செய்த
பொற்றாமரை மலர் என்க, இனி எரி போன்ற தாமரைமலர்
எனினுமாம். எள்ளிய- இகழ்ந்த. 54. மணிக்
கபோதம்-மணிகளாற் செய்த கபோதம் என்னும் உறுப்பு, இதனைச்
சுவர்த்தலங்களின் வைக்கும் சித்திரக் கம்பி என்பர் சூடாமணி
நிகண்டாசிரியர் (3 - 61).
|
|