| உரை | 
|  | 
| 2. இலாவாண காண்டம் | 
|  | 
| 6. தெய்வச் சிறப்பு | 
|  | 
| பரூஉப்பணைப் 
      பளி்ங்கிற் பட்டிகை கொளீஇ வேற்றொழில் பொலிந்த மாற்றுமருங் 
      கமைத்துக்
 காம்புங் 
      கதிருங் கூம்புமணிக் குமுதமும்
 பாங்குற நிரைத்த பயிற்சித் தாகிப்
 | 
|  | 
| 85-88; பரூஉப்பணை.......பயிற்சித்தாகி | 
|  | 
| (பொழிப்புரை)   மிகப் பருத்த 
      பளிங்காலே பட்டங்கள்அமைத்து வேல் வடிவமைக்கப்பட்டுப்
      பொலிந்த ஒன்றனோடு ஒன்று மாறுபட்ட பக்கங்களை அமைத்து தண்டும் 
      சலாகையும் குமுத மொட்டுக்களும் அப் பக்கங்களிலே வரிசையாக நட்டுவைத்த 
      தொழிலை யுடையதாய் என்க. | 
|  | 
| (விளக்கம்)  85. பரூஉ- 
      பருத்து. ,பணை-பருமை. மிகப் பருத்த என்க, பட்டிகை-பட்டம்; விளிம்பிற் 
      கட்டும் பட்டம் என்க. 87. காம்பு-தண்டு; தடி. 
      கதிர்-சலாகை. குவிந்த குமுத மொட்டுவடிவமாக மணிகளிழைத்த நுனியையுடய 
      தண்டுகள் என்க. இவையெல்லாம் மதில் உச்சியில் நடப்படுவன 
      என்க.
 88. பயிற்சித்து - வேலைப்பாட்டினையுடையது.
 |