உரை |
|
2. இலாவாண காண்டம் |
|
6. தெய்வச் சிறப்பு |
|
பரூஉப்பணைப்
பளி்ங்கிற் பட்டிகை கொளீஇ
வேற்றொழில் பொலிந்த மாற்றுமருங்
கமைத்துக் காம்புங்
கதிருங் கூம்புமணிக் குமுதமும்
பாங்குற நிரைத்த பயிற்சித் தாகிப்
|
|
85-88; பரூஉப்பணை.......பயிற்சித்தாகி
|
|
(பொழிப்புரை) மிகப் பருத்த
பளிங்காலே பட்டங்கள்அமைத்து வேல் வடிவமைக்கப்பட்டுப்
பொலிந்த ஒன்றனோடு ஒன்று மாறுபட்ட பக்கங்களை அமைத்து தண்டும்
சலாகையும் குமுத மொட்டுக்களும் அப் பக்கங்களிலே வரிசையாக நட்டுவைத்த
தொழிலை யுடையதாய் என்க.
|
|
(விளக்கம்) 85. பரூஉ-
பருத்து. ,பணை-பருமை. மிகப் பருத்த என்க, பட்டிகை-பட்டம்; விளிம்பிற்
கட்டும் பட்டம் என்க. 87. காம்பு-தண்டு; தடி.
கதிர்-சலாகை. குவிந்த குமுத மொட்டுவடிவமாக மணிகளிழைத்த நுனியையுடய
தண்டுகள் என்க. இவையெல்லாம் மதில் உச்சியில் நடப்படுவன
என்க. 88. பயிற்சித்து - வேலைப்பாட்டினையுடையது.
|