|
உரை | | 2. இலாவாண காண்டம் | | 6. தெய்வச் சிறப்பு | | திருமுடி
இந்திரர் இருநிலக் கிழவர்
உரிமை மகளிரொ டுருபுபடப்
புனைந்த பொத்தகக்
கைவினைச் சித்திரச் செய்கைத் 150
தத்தந் தானத் தத்தக நிறீஇ
| | 147 - 150 ; திருமுடி..........நிறீஇ
| | (பொழிப்புரை) அழகிய முடிக்கலன்
அணிந்த இந்திரருடைய ஓவியங்களும் பெரிய நிலத்தைக் காத்தருளிய பேரரசர்
ஓவியங்களும் இவருடைய கோப்பெருந்தேவியருடைய ஓவியங்களுமாக
வடிவமுண்டாக வரையப்பட்ட நூன்முறையானே இயற்றப்பட்ட சித்திரப்படங்களை
அவ்வவற்றிற்குத் தகுந்த இடங் களிலே அழகுதக்கிருப்ப நிறுத்தி என்க,
| | (விளக்கம்) 147.
இந்திரரும் பலராகலின் பன்மை கூறினார். இருநிலக்கிழவர்
என்றது, இக்குவாகு குலம் ,, அரிகுலம், குருகுலம், நாதகுலம், உக்கிரகுலம் (
இவை அருக சமயத்தினர் கூறுவன)என்னும் ஐம்பெருங் குலத்தும் பிறந்து சிறந்த
முடி மன்னர் உருவந்தீட்டிய ஓவியங்களை. உரிமை மகளிர் என்றது,
இந்திரரும் இருநிலக் கிழவருமாகிய இவருடைய கோப்பெருந் தேவியர்
உருவங்களை. 148. உருபு-வடிவம். 149,
பொத்தகம் - ஓவியநூல். சித்திரச் செய்கை என்றது
உருவப்படங்களை. 150. அத்தக -அழகுண்டாக.
|
|