உரை
 
2. இலாவாண காண்டம்
 
7. நகர்வலங் கொண்டது
 
           மல்லல் ஆவணத் திருபுடை மருங்கினும்
           நண்ணா மாந்த ராயினுங் கண்ணுறின்
           இமைத்தல் உறாஅ அமைப்பின் மேலும்
     15     புதுமணக் கோலத்துப் பொலிவொடு புணர்ந்த
           கதிர்முடி மன்னனைக் காண்பது விரும்பி
 
               (12-16 மகளிர் செயல்)
                12-16 மல்லல்...,..விரும்பி
 
(பொழிப்புரை) காண்போர் பகைவரே ஆயினும் காணுங்கால் கண்ணிமைத்துக் காண்டல் இயலாத இயற்கை அழகின் மேலும் புதுமணக் கோலத்துப் பொலிவோடே பொருந்திய   ஒளிமுடியை யுமுடைய அத்வுதயண மன்னனைக் காணவிழைந்து  வளமிக்க அங்காடித் தெருவின் இருபக்கத்தும் என்க.
 
(விளக்கம்) 12- மல்லல்-வளம். ஆவணம்-அங்காடித்தெரு; (கடைத்தெரு)
    13. நண்ணாமாந்தல் - பகைவர். அவர் காணர் அரிதாகலின் கண்ணுறின் என்றார்,
    14. இமைத்தல் உறாஅ- இமைத்துக் காண வியலாத.காண்போர் கட்பொறியைத் தன் வயமாக்கிக் கோடலின் இமைத்தல் இயலாதென்பது கருத்து. கண்டுகண்டமையாத பேரழகு என்பதாம்.அமைப்பு-இயற்கை அழகு.
    16. கதிர்முடிமன்னன்; உதயணகுமரன்,