உரை |
|
2. இலாவாண காண்டம் |
|
7. நகர்வலங் கொண்டது |
|
மல்லல்
ஆவணத் திருபுடை
மருங்கினும்
நண்ணா மாந்த ராயினுங் கண்ணுறின்
இமைத்தல் உறாஅ அமைப்பின்
மேலும் 15 புதுமணக் கோலத்துப்
பொலிவொடு
புணர்ந்த
கதிர்முடி மன்னனைக் காண்பது விரும்பி
|
|
(12-16 மகளிர்
செயல்)
12-16 மல்லல்...,..விரும்பி
|
|
(பொழிப்புரை) காண்போர்
பகைவரே ஆயினும் காணுங்கால் கண்ணிமைத்துக் காண்டல் இயலாத இயற்கை
அழகின் மேலும் புதுமணக் கோலத்துப் பொலிவோடே பொருந்திய
ஒளிமுடியை யுமுடைய அத்வுதயண மன்னனைக் காணவிழைந்து வளமிக்க
அங்காடித் தெருவின் இருபக்கத்தும் என்க.
|
|
(விளக்கம்) 12-
மல்லல்-வளம். ஆவணம்-அங்காடித்தெரு; (கடைத்தெரு) 13.
நண்ணாமாந்தல் - பகைவர். அவர் காணர் அரிதாகலின் கண்ணுறின்
என்றார், 14. இமைத்தல் உறாஅ- இமைத்துக் காண
வியலாத.காண்போர் கட்பொறியைத் தன் வயமாக்கிக் கோடலின் இமைத்தல்
இயலாதென்பது கருத்து. கண்டுகண்டமையாத பேரழகு என்பதாம்.அமைப்பு-இயற்கை அழகு. 16. கதிர்முடிமன்னன்; உதயணகுமரன்,
|