|
உரை | | 2. இலாவாண காண்டம் | | 7. நகர்வலங் கொண்டது | | மணிஅறைந் தன்ன மாவீழ்
ஓதி
அணிபெறக் கிடந்த அம்பொற் சூட்டினர்
சூடுறு பொன்வினைச் சுவணர்
புனைந்த 20 தோடுங்
கடிப்புந் துளங்கு காதினர்
| | 17-20; மணி......விரைந்து
| | (பொழிப்புரை) நீலமணியை
இழையாக்கிப் பதித்து வைத்தாற் போன்ற வண்டுகள் மொய்க்கின்ற
கூந்தலினையும் அக்கூந்தல் அழகு பெறும்படி அதனயலே கிடந்த அழகிய
பொற்பட்டத்தினையும் உடையரும், சுவணமென்னும் பொன்னாலியற்றிய
அணிகலன்களை யுடையோரும் தோடுங் கடிப்பும் அசையா நின்ற செவியினை
யுடையோரும் என்க,
| | (விளக்கம்) 17. மணி -
நீலமணி. அறைந்தன்ன-பதித்து வைத்தாற் போன்ற. நீலமணியை இழையாக்கி
அறைந்து வைத்தாற் போன்ற என்றவாறு. மா-வண்டு.
ஓதி-கூந்தல். 18. அக்கூந்தல் அழகுறும்படிஎன்க.
பொற்சூட்டு-நெற்றிப்படடம்.
19. சுடுதலுற்ற பொற்றொழிலாற் செய்த சுவணப்பொன் அணிகலன்களை யுடையோரும்
என்க. 20. தோடு, கடிப்பு என்பன
செவியணிகலன்கள்.
|
|