|  | | உரை |  |  |  | 2. இலாவாண காண்டம் |  |  |  | 7. நகர்வலங் கொண்டது |  |  |  | மணிஅறைந் தன்ன மாவீழ் 
      ஓதி அணிபெறக் கிடந்த அம்பொற் சூட்டினர்
 சூடுறு பொன்வினைச் சுவணர் 
      புனைந்த
 20    தோடுங் 
      கடிப்புந் துளங்கு காதினர்
 |  |  |  | 17-20; மணி......விரைந்து |  |  |  | (பொழிப்புரை)   நீலமணியை 
      இழையாக்கிப் பதித்து வைத்தாற் போன்ற வண்டுகள் மொய்க்கின்ற 
      கூந்தலினையும் அக்கூந்தல் அழகு பெறும்படி அதனயலே கிடந்த அழகிய 
      பொற்பட்டத்தினையும் உடையரும், சுவணமென்னும் பொன்னாலியற்றிய 
      அணிகலன்களை யுடையோரும் தோடுங் கடிப்பும் அசையா நின்ற செவியினை 
      யுடையோரும் என்க, |  |  |  | (விளக்கம்)  17. மணி - 
      நீலமணி. அறைந்தன்ன-பதித்து வைத்தாற் போன்ற. நீலமணியை இழையாக்கி 
      அறைந்து வைத்தாற் போன்ற என்றவாறு. மா-வண்டு. 
      ஓதி-கூந்தல். 18. அக்கூந்தல் அழகுறும்படிஎன்க. 
      பொற்சூட்டு-நெற்றிப்படடம்.
 19. சுடுதலுற்ற பொற்றொழிலாற் செய்த சுவணப்பொன் அணிகலன்களை யுடையோரும் 
      என்க.
 20. தோடு, கடிப்பு என்பன 
      செவியணிகலன்கள்.
 | 
 |