(விளக்கம்) 48.
ஒருபுடை-அறத்தினது பக்கம். 49 இருபுடை-அறமறமாகிய இரண்டு
பக்கத்தினும்- ஏயர்மரபிற் றோன்றியவனாகிய
என்க, 50. சிதை பொருள்-இடையிலே முறிந்துகெடும்
ஆள்வினை.
'தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
இடங்கண்ட பின்னல் லது'
(திருக் - 491)
எனவும், 'உடைத்தம்
வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முரிந்தார் பலர்'
(திருக் - 473)
எனவும், இன்னோரன்னபிறவும் அரசியலறமாகலின் அவ்வறத்திற்
றவிராதான் என்பார் 'சிதைபொருள் வலியாச் செறிவுடைச் செய்தொழில்
உதயணகுமரன்' என்றார். 53. ஞாலந் திரியா-உலகின்கட்
பிறழ்தலில்லாத. இனிஞாலந் திரியினும் திரியாத நிறை என ஒருசொற்
பெய்துரைப்பினும் ஆம். 'நிலம்புடை பெயரினும்
விசும்புவந் திழியினும், கலங்காக் கடவுட் கற்பு' என்றிவ்வாசிரியரே
(இலா-17, 139 -40) கூறுதல் உணர்க, இனி
வள்ளுவனார், 'ஊழி பெயரினுந்
தாம்பெயரார் சான்றாண்மைக் காழி
எனப்படு
வார்'
(திருக் - 189) என்றோதுதலும் உணர்க
திண்கோள்- திண்ணிய
கொள்கை, அஃதாவது கற்புடைமை; 'கற்பென்னும் திண்மை' என்பது வள்ளுவர்
மெய்ம்மொழி. (திருக் - 54.) 54. உத்தம மகளிர் என்றது
குலமகளிராகிய கன்னியரை.
|