| உரை | 
|  | 
| 2. இலாவாண காண்டம் | 
|  | 
| 7. நகர்வலங் கொண்டது | 
|  | 
| காட்சி 
      விரும்பன்மின் மாட்சி 
      யின்றென ஈனாத் தாயர் ஆனாது விலக்கும்
 65    
      ஆணை மறுத்தியாம் ஆண 
      முடைமையின்
 இந்நகர் காண்கஎம் அன்னை மாரெனக்
 | 
|  | 
| 63- 
      66 ; காட்சி...,..அன்னைமாரென | 
|  | 
| (பொழிப்புரை)   உதயண 
      குமரனைக் காண்டல் விரும்பாதே கொண்மின்; அங்ஙனம் விரும்புதல் 
      மாட்சிமையுடைய தாகாது, என்று செவிலித் தாயர் இடையறாது தடுக்கவும், 
      அவர்தம் கட்டளையை மறுத்து 'எம்மன்னையீர் ! யாம் உதயணனைக்காண 
      விரும்பினோமல்லேம்; ஒப்பனை செய்யப்பட்ட இச்சயந்தியின் அழகினை 
      மட்டுமே காண்பேம் எமக்கு அவ்விருப்பமிருத்தலானே ' என்று கூறி 
    என்க. | 
|  | 
| (விளக்கம்)  செவிலியர். 
      உதயணனைக் கண்ட மகளிர் எல்லாம் வருந்தினர் ஆதலான் நீயிர் 
      விரும்பன்மின் மாட்சியின்று என விலக்குகின்ற ஆணையை மறுத்து யாம் 
      ஆணமுடைமையின் நகர் காண்கம் என்று கூறி என 
      இயைக்க 63. விரும்பன்மின் - விரும்பாதே கொண்மின்.
 64, ஈனாத் தாயர்-செவிலித்தாயர்..ஆனாது - அமையாது;இடையறாமல்.
 65. ஆணம்-  விருப்பம்.
 66. காண்கம்-காண்பேம். அன்னைமார்; 
      விளி.
 |