உரை
 
2. இலாவாண காண்டம்
 
7. நகர்வலங் கொண்டது
 
           கண்ணின வேட்கை பின்னின்று துரப்ப
           வாயின் மாடத்து மருங்குஅணி பெற்ற
           வரிச்சா லேகம் விரித்தனர் அகற்றித்
     70    ததும்புங் கிண்கிணித் தகைமலர்ச் சேவடிப்
           பெதும்பை மகளிர் விதும்பி நோக்கினர்
 
        67-71; கண்ணின......நோக்கினர்
 
(பொழிப்புரை) தங் கண்ணின் விருப்பம் பெரிதும் தூண்டிச்செலுத்துதலானே வாயின் மாடத்தின்கண் அமைந்த சாளரங்களை அகலவிரித்துக் கதவுகளை அகற்றி விதுப்புற்று நோக்கா நின்றனர் என்க.
 
(விளக்கம்) 67, கண்ணின வேட்கை -கண்களுக்குரிய அவா;காட்சி -விருப்பம். துரப்ப - செலுத்த.
    69, வரிச்சாலேகம்-வரிகளையுடைய சாளரங்கள், விரித்தனர்; முற்றெச்சம், இதனால் விரிக்கவும் சுருக்கவுமியன்ற சாளரங்களிருந்தமை விளங்கும்.
    71. பெதும்பை - மகளிரிக்குரிய இரண்டாம் பருவம். விதும்பு தல் - காண்டற்கு விரைந்து விரும்புதல்,