|  | | உரை |  |  |  | 2. இலாவாண காண்டம் |  |  |  | 7. நகர்வலங் கொண்டது |  |  |  | கண்ணின 
      வேட்கை பின்னின்று 
      துரப்ப வாயின் மாடத்து மருங்குஅணி பெற்ற
 வரிச்சா லேகம் விரித்தனர் 
      அகற்றித்
 70    ததும்புங் 
      கிண்கிணித் தகைமலர்ச் சேவடிப்
 பெதும்பை மகளிர் விதும்பி 
      நோக்கினர்
 |  |  |  | 67-71; 
      கண்ணின......நோக்கினர் |  |  |  | (பொழிப்புரை)  தங் 
      கண்ணின் விருப்பம் பெரிதும் தூண்டிச்செலுத்துதலானே வாயின் மாடத்தின்கண் 
      அமைந்த சாளரங்களை அகலவிரித்துக் கதவுகளை அகற்றி விதுப்புற்று நோக்கா 
      நின்றனர் என்க. |  |  |  | (விளக்கம்)  67, கண்ணின 
      வேட்கை -கண்களுக்குரிய அவா;காட்சி -விருப்பம். துரப்ப - 
      செலுத்த. 69, வரிச்சாலேகம்-வரிகளையுடைய சாளரங்கள், 
      விரித்தனர்; முற்றெச்சம், இதனால் விரிக்கவும் சுருக்கவுமியன்ற 
      சாளரங்களிருந்தமை விளங்கும்.
 71. பெதும்பை - மகளிரிக்குரிய 
      இரண்டாம் பருவம். விதும்பு தல் - காண்டற்கு விரைந்து 
    விரும்புதல்,
 | 
 |