(விளக்கம்) 72.
இயல்-அழகு. சாயல்-மென்மை, நிகர் - ஒப்பு. இல்லார் தமது காரிகை
என்க, 73. கடுநுனை - மிகக் கூர்த்த
நுனி, 74. உட்கு-அச்சம்; ஊராண் ஒழுக்கு-ஒப்புரவொழுகும்
ஒழுக்கம்
'கட்கினியாள் காதலன் காதல்
வகைபுனைவாள் உட்கு உடையாள் ஊராண்
இயல்பினாள் - உட்கி இடனறிந்று ஊடி இனிதின்
உணரும் மடமொழி மாதராள் பெண்'
என நாலடியினும் வருதல் உணர்க, இதனை ஆசிரியர் நச்சினார்க்கினியர்
(தொல் - கற்பு - 12,) எடுத்துக்காட்டி ''ஊராண்மை,''. இது சுற்றம் ஓம்பல்
என்று விளக்கினர். இனி, இவ்வாசிரியர் உஞ்சைக் காண்டத்து
36- 280-1 'வழுக்கிக் கூறினும் வடுவென நாணி, ஒழுக்க நுனித்த ஊராண்
மகளிர்' என்றோதுதலும் காண்க. 75. கட்கின் -
கண்ணுக்கு இனிய. கட்டிரை - அத்தூண்டிலி்ற் கட்டப்படும் இரை.
76. இருங்கண் ஞாலம் - பெரிய இடத்தையுடைய உலகம்; 77.
அருங்கலம்-பேரணிகலன், வெறுக்கை -பொருள். 78. வழாஅ
-வழுவாத.
|