|  | | உரை |  |  |  | 2. இலாவாண காண்டம் |  |  |  | 7. நகர்வலங் கொண்டது |  |  |  | மீட்டல் 
      செல்லா வேட்ட 
      விருப்பொடு கோடுகொள் மயிலின் குழாஅம் 
      ஏய்ப்ப
 மாடந் தோறு மலிந்திறை கொண்டனர்
 |  |  |  | 92-94: 
      மீட்டல்................கொண்டனர |  |  |  | (பொழிப்புரை)   மீட்பதற்கியலாத வேணவாவோடு மலைச்சிகரங்களிலே ஏறிய மயிற்கூட்டம் 
      போல மாடமாளிகை தோறும்மிக்குக் கூடித் தங்காநின்றனர் 
  என்க. |  |  |  | (விளக்கம்)  பூங்குழை 
      மகளிர் உதயணகுமரன் இரப்ப எய்தும் இன்சுவை அமிர்தம் புணரும்படி கூடப் 
      பெறின் போகமும் இனிதே என்று கூறி வேணவாவோடு மாடங்களின் மிசை 
      மயிற்குழாம் போலக் கூடியிருந்தனர் என்க, 92, 
      மீட்டல் செல்லா -அவன்பால் செல்லும் மனத்தை மீட்கமாட்டாமைக்குக்
      காரணமான ( விருப்பம்) என்க.
 93. கோடு - மலைச்சிகரம். 
      ஏய்ப்ப - ஒப்ப,
 94. மலிந்து-மிக்கு, இறைகொண்டனர் 
      -தங்கினர்.
 | 
 |