உரை
 
2. இலாவாண காண்டம்
 
7. நகர்வலங் கொண்டது
 
           மீட்டகம் புக்கு மேவரு செல்வமொடு
           மங்கல மண்ணுநீர் மரபின் ஆடக்
           கொங்கலர் கோதையைப் பண்டுமுன் பயின்ற
     150    தோழி தானே தாழாது விரும்பிக்
           கைந்நவில் கம்மத்துக் கம்மியன் புனைந்த
           செய்கலத் துள்ளுஞ் சிறந்தவை நோக்கி
           ஏற்குந் தானத்துப் பாற்பட அணிந்து
 
           (147 - 153 ; மேவரு,.,.,...,,அணிந்து
 
(பொழிப்புரை) விருப்பம் வருவதற்குக் காரணமான செல்வத்தோடே, மங்கலநீர் முறைப்படி ஆடிய பின்னர் வாசவதத்தையைக் காஞ்சனமாலை என்னும் தோழியே காலந் தாழ்த்திராமல் விரும்பித் தொழிற்றிறமமைந்த கம்மியன் இயற்றிய அணிகலன்களினும் சிறந்தவற்றை ஆராய்ந்தெடுத்து அவற்றை ஏற்கும் உறுப்புக்களிடந்தே அணிந்து என்க.
 
(விளக்கம்) 147. .நகர்வலஞ் செய்து முடித்தபின் நீராடும் முறைமை உண்டாகலின் அம்முறைக்கேற்ப ஆட என்க, மே- விருப்பம்; மேன்மையுமாம். கொங்கு - மணம், தேனுமாம், கோதை; (ஆகுபெயர்) வாசவதத்தை. வாசவதத்தைக்கு அடிநாட்டொட்டுத் தோழியாயிருக்கும் காஞ்சனமாலை என்க.
    150. தாழாது - காலந் தாழ்த்தாமல்,
    151, கைத்தொழிற்றிறமிக்க கம்மத் தொழிலையுடைய கம்மியன் என்க.
    152, செய்கலம்; வினைத்தொகை; அணிகலம்.
    153. ஏற்குந்தானம் - அவற்றை ஏற்றற்குரிய உறுப்பு,