| உரை | 
|  | 
| 2. இலாவாண காண்டம் | 
|  | 
| 8. யூகி  போதரவு | 
|  | 
| மல்குகடல் 
      தானை மன்னரை 
      வணக்கிப் பில்குகளி 
      யானைப் பிரச்சோ 
      தனனெனும்
 ஐந்தலை 
      நாகம் அழல வெகுட்டிப்
 30   பைந்தளிர்க் கோதையைப் பற்றுபு தழீஇச்ன
 | 
|  | 
| 27 - 30; மல்கு........தழீஇ | 
|  | 
| (பொழிப்புரை)   அவ்வுதயணகுமரன் 
      பெருகிய கடல் போன்ற படையுடனே தன்னை எதிர்த்த அரசர்களை வென்று தன்னை 
      வணங்கும்படி செய்து, மதஞ்சொரியும் களிப்பினையுடைடைய யானையையுடைய 
      பிரச்சோதன மன்னன் என்னும் ஐந்தலை அரவினை வெகுள்வித்துப் பசிய தளிர் 
      விரவிய மலர்மாலையினையுடைய வாசவதத்தையையும் கைப்பற்றித் தழீஇக் 
      கொண்டு,என்க, | 
|  | 
| (விளக்கம்)  27. மல்கு-பெருகிய, கடலை 
      ஒத்த பெரும்படையுடனே வந்து எதிர்த்த என விரிக்க. மன்னர் - 
      வாசவதத்தையை  மீட்டற்கு வந்த அரசர். 28. பில்கு 
      களியானை-மதம்சொரியா நின்ற களிப்பினையுடைய
      களிற்றியானை.
 29. சினமிகுதி கூறுவார் ஐந்தலை நாகம் என்று 
      உருவகித்தார். 'ஐவாய் அரவின் அவிரழல் 
      போன்று  சீறி'. (சீவக 2345)என்றார். திருத்தக்தேவரும். 
     அழல-நெஞ்சழலும்படி. வெகுட்டி; பிறவினை;
      வெகுளச்செய்து,
 30. கோதை ; வாசவதத்தை. பற்றுபு -கைப்பற்றி. 
      தழீஇ- தழுவிக் கொண்டு.
 |